'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
தன் மனதுக்கு தோன்றியதை வெளிப்படையாக பேசக்கூடியவர் சிம்பு. அதனால்தான் தானும் ஒரு நடிகன் என்றபோதும், நான் அஜீத் ரசிகன் என்று ஓப்பனாக சொல்வார். இதனால் மற்ற நடிகர்கள் தன்னை கோபித்துக் கொள்வார்களே என்றெல்லாம் அவர் கவலைப்படுவதில்லை. அதோடு நில்லாமல், அஜீத் நடித்த ஒவ்வொரு படத்தையும் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதை ஒரு கொள்கையாகவே கடைபிடித்து வருகிறார் சிம்பு.
ஒருவேளை அன்றைய தினத்தில் தான் வேறு படங்களின் படப்பிடிப்பில் இருந்தால்கூட படப்பிடிப்புக்கே லீவு போட்டு விட்டு டிக்கெட் முன்பதிவு செய்து பார்த்து ரசிப்பார். மற்ற ரசிகர்களைப் போலவே தல அதிரடியாக தோன்றும காட்சிகளை கைதட்டியும் ஆரவாரம் செய்வார்.
அவரைத் தொடர்ந்து இப்போது தனுசும் தான் விஜய் ரசிகன் என்பதை வெளிப்படையாக சொல்லி வருகிறார். குறிப்பாக, ஒரு மேடையில், என்னை விட சிறந்த நடிகர் தனுஷ்தான் என்று விஜய் சொன்னதையடுத்து கண் கலங்கிப்போன தனுஷ். அவரைவிட நான் ஒன்றும் பெரிய நடிகன் இல்லை. அவர் அப்படி சொல்கிறார் என்றால் அது அவரது பெருந்தன்மை என்று தனது டுவிட்டரில் விஜய் பற்றி சொல்லியிருந்தார்.
அதிலிருந்து தனுசும் விஜய்யின் ரசிகராகி விட்டார். அதனால் தீபாவளிக்கு திரைக்கு வரும் கத்தி படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்து ரசிப்பதற்காக இப்போதே தயார் நிலையில் உள்ளாராம். ஆனால், படம் திரைக்கு வருவதற்கே இன்னும் 5 நாட்கள் உள்ளதே என்று விஜய்யின் தீவிர ரசிகர்களைப் போன்றே தனுசும் பீல் பண்ணியபடி தனது டுவிட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.