பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
உத்தமவில்லனை முடித்த கையோடு த்ருஷ்யம் ரீமேக்கான பாபநாசம் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் கமல். முதல்கட்ட படப்பிடிப்பு நெல்லை மாவட்டத்தில் நடந்து முடியும் தருவாயில் இருந்தபோது, புட்பாய்சன் காரணமாக சென்னை வந்து அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் கமல். அதையடுத்து ஒரு மாத காலம் அவர் ஓய்வில் இருந்து விட்டு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் அதையடுத்து தொடங்கிய படப்பிடிப்பு தற்போது கேரளாவில் உள்ள தொடுபுழாவில் நடந்து கொண்டிருக்கிறது. த்ருஷ்யம் படப்பிடிப்பு நடந்த சில லொகேஷன்களில் மீண்டும் நடக்கிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் காவல் நிலையம் செட் போட்டு போலீசார் கமலை தாக்குவது போன்ற காட்சியை படமாக்கியிருக்கிறார்கள்.
அப்போது போலீசார் அவரது முகத்தில் குத்தும்போது மூக்கில் இருந்து ரத்தம் கொட்ட வேண்டும் என்பதற்காக ஒரு ரப்பர் துண்டை அவரது மூக்கில் வைத்து படமாக்கியிருக்கிறார்கள். ஆனால் ஒருவர் ஆவேசமாக கமலை தாக்குவது போன்ற ஷாட் எடுக்கப்பட்டபோது அவரது கை கமலின் மூக்கில் சற்று வேகமாக பட்டதால் மூக்கு துவாரத்தில் இருந்த ரப்பர் துண்டு உள்ளே சென்று விட்டதாம்.
இதனால் மூச்சு விட முடியாமல் திணறியிருக்கிறார் கமல். அதையடுத்து படப்பிடிப்பை நிறுத்தி விட்டு அவரை தொடுபுழாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அந்த ரப்பர் துண்டை வெளியே எடுத்திருக்கிறார்கள் சுமார் அரை மணி நேரம் கமலுக்கு இந்த சிகிச்சை நடந்திருக்கிறது.இருப்பினும் மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால் 2 மணி நேரத்திற்கு பிறகுதான் சகஜநிலைக்கு திரும்பினாராம் கமல்.