ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கோ படத்தில் நடித்த கார்த்திகா, கடல் படத்தில் நடித்த துளசி நாயர் இருவரும், மாஜி நடிகை ராதாவின் கலைவாரிசுகள். இவர்களில் துளசி நாயர் நடித்துள்ள, யான் படம் சமீபத்தில் திரைக்கு வந்திருப்பதையடுத்து, அந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக, மும்பையில் இருந்து சென்னை வந்திருந்தார் கார்த்திகா. அப்போது, முதல் படமான, கடல் படத்தை விட இதில் தன், தங்கை துளசியின் நடிப்பை பார்த்து வியந்து போனாராம் அவர். உடனடியாக, தங்கையை பாராட்டு மழையில் நனைத்து விட்டாராம்; இதனால், சந்தோஷத்தில் இருக்கிறார், துளசி. இதுகுறித்து அவர் கூறுகையில், அக்கா ரொம்ப கண்டிப்பானவர். ஏதாவது தப்பு செய்து விட்டால், அவரை பார்த்து நடுங்குவேன். அப்படிப்பட்ட அக்காவிடம் இருந்து எனக்கு பாராட்டு கிடைத்துள்ளதை, பெருமையாக கருதுகிறேன் என்கிறார்.