டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
லிங்கா படத்திற்கு பிறகு நடிகர் ரஜினி, ''பங்காரத மனுஷ்யா'' என்ற கன்னட ரீ-மேக்கில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோச்சடையான் படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும், ''லிங்கா'' படத்தில் நடித்து வருகிறார். ரஜினி இரண்டு வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹாக நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கிறது. இந்தாண்டு ரஜினி பிறந்தநாளிலோ அல்லது அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸாகலாம் என தெரிகிறது. இதனிடையே லிங்கா படத்திற்கு பிறகு நடிகர் ரஜினி, கன்னட படத்தின் ரீ-மேக்கில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ரஜினியின் நெருங்கிய நண்பரான ராஜ்பகதூர் கூறியுள்ளதாவது, லிங்கா படத்திற்கு முன்பாக, நானும், ரஜினியும் பங்காரத மனுஷ்யா படத்தை பார்த்தோம். இந்தப்படத்தை ரீ-மேக் செய்து நடிக்க வேண்டியதுதானே என்று ரஜினியிடம் கூறினேன். அதற்கு ரஜினியின் பண்ணலாமே, நானே நடிக்கிறேன் என்றார். ஆனால் அப்போது கே.எஸ்.ரவிக்குமார் சொன்ன லிங்கா பட கதை பிடித்துப்போக, முதலில் லிங்காவை முடித்துவிட்டு அதன்பிறகு பங்காரத மனுஷ்யா ரீ-மேக்கில் நடிக்கலாம் என்றார். நானும் சரி என்றேன் என கூறியுள்ளார்.
1972-ம் ஆண்டில் சித்தலிங்கய்யா இயக்கத்தில், ராஜ்குமார் நடிப்பில் வெளிவந்த ''பங்காரத மனுஷ்யா'' படம், படித்த இளைஞர்களை விவசாயத்திற்குள் ஈர்க்கும் வகையில் கதை அமைக்கப்பட்டு இருந்தது. அப்போது இந்தப்படம் சூப்பர் ஹிட்டானது. இந்தப்படம் வெளிவந்து சுமார் 42 ஆண்டுகள் ஆகிவிட்டநிலையில், தற்போதைய சூழலில் இந்தப்படம் மீண்டும் ரீ-மேக் செய்யப்பட்டு, அதில் ரஜினி நடிக்கும் பட்சத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. மேலும் ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர் கூறியுள்ளதை பார்க்கும் போது, லி்ங்கா படத்திற்கு பிறகு ரஜினி ''பங்காரத மனுஷ்யா'' ரீ-மேக்கில் தான் நடிப்பார் என தெரிகிறது.