ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
பழம்பெரும் நடிகரான ரன்தீர் கபூர் தற்போது சூப்பர் நானி படத்தில் தாத்தா வேடத்தில் நடித்து வருகிறார். தனது மகள்கள் குறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தனது இளைய மகள் கரீனா தற்போது குழந்தை பெற்றுக் கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை தற்போது இல்லை என கூறி இருப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரன்தீர் கபூரின் இளைய மகளான நடிகை கரீனா கபூர், நடிகரும் தயாரிப்பாளருமான சைப் அலிகானை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் தனக்கு தற்போது குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணம் எதுவும் இல்லை என தனது பேட்டிகளில் தெரிவித்துள்ளார். இருப்பினும் இவரது மூத்த சகோதரியான கரிஷ்மா கபூருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
தனது பேரக் குழந்தைகள் பற்றி தெரிவித்த ரன்தீர் கபூர், எனது இரண்டு பேரப் பிள்ளைகளையும் நினைத்து நான் பெருமை கொள்கிறேன். அவர்களை பார்க்காமல் நான் இருந்ததில்லை. குழந்தை பெற்று கொள்வது பற்றி நானும் கரீனாவிடம் பலமுறை பேசி விட்டேன். ஆனால் அவர் தற்போது தனக்கு அந்த எண்ணம் இல்லை என கூறி விட்டார். அதனால் என்னால் எதுவும் பண்ண முடியவில்லை. இன்றைய தலைமுறை குழந்தைகள் யாரும் அட்வைஸ் செய்வதை விரும்வுதில்லை. இப்படி இருப்பதில் அவர் சந்தோஷமாக இருந்தால் அது எனக்கும் சந்தோஷம் தான் என தெரிவித்துள்ளார்.