தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டிணத்தையும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளையும் 'ஹுட் ஹுட்' புயல் புரட்டிப் போட்டுவிட்டது. தெலுங்கு நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் புயல் நிவாரண நிதியாக ஆந்திர முதலமைச்சரிடம் லட்சக் கணக்கில் கொடுத்து வருகிறார்கள். ஏன் தமிழ் நடிகர்களான சூர்யா, கார்த்தி, விஷால் ஆகியோர் கூட நிதி வழங்கியுள்ள நிலையில் தெலுங்கில் முன்னணி நடிகைகளாக இருக்கும் ஒருவர் கூட எந்த ஒரு நிதியையும் வழங்காதது தெலுங்குத் திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அனுஷ்கா, த்ரிஷா, தமன்னா, ஸ்ருதிஹாசன் என பல நடிகைகள் தெலுங்கில் பல படங்களில் நடித்துத்தான் முன்னணி நடிகைகளாக தமிழில் மட்டுமல்லாது, ஹிந்தியிலும் புகழ் பெற்று வருகிறார்கள். அப்படியிருக்க முன்னணி நடிகைகள் யாருமே இன்னும் ஏன் எந்த ஒரு நிதியையோ அல்லது ஆறுதலான வார்த்தைகளையோ கூடச் சொல்லவில்லை என்பது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னணி நடிகைகள் பலரும் சமூக வலைத்தளங்களில் பல கருத்துக்களை அள்ளி வழங்குவது வழக்கம்.
ஆனால், அவர்களது படங்களை ரசித்துப் பார்த்த ரசிகர்களும், அவர்களது குடும்பங்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை, அவர்கள் ஏன் குறைந்தபட்ச நிதியைக் கூட வழங்க முன் வராதது, தெலுங்குத் திரையுலகினரிடமும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாம். காஜல் அகர்வால் 5 லட்சம், சமந்தா பிரதியுஷா தொண்டு நிறுவனம் மூலமாக 10 லட்சம், வளர்ந்து வரும் நடிகையான ராகுல் ப்ரீத் சிங் மட்டும் ஒரு லட்ச ரூபாய் நிதியாக வழங்கியுள்ளார். தெருவில் அனாதையாகச் சுற்றிக் கொண்டிருக்கும் நாய்களைக் கூட எடுத்து வளர்க்கும் தாராள, கருணை மனம் கொண்ட நடிகைகளுக்கு மனித உயிர்கள் மீது ஏன் கருணை வரவில்லை....?
பாதிக்கப்பட்ட மக்களுக்கு கலை நிகழ்ச்சி நடத்தித்தான் பணம் வசூலிக்க வேண்டும் என்பதில்லையே...