போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் |
நாம் ஆச்சரியப்படும் போது சொல்லும் ஒற்றை எழுத்தை தலைப்பாக வைத்து படமெடுத்து வரும் விருது தயாரிப்பாளர் மீது பிரம்மாண்ட இயக்குனர் கடும் கோபத்தில் இருக்கிறாராம். அந்தப் படம் ஆரம்பமான நாளிலிருந்து இதுவரை பட ரிலீஸ் வரை பல விஷயங்கள் திட்டமிட்டபடி நடக்காமல் போனதே அதற்குக் காரணம் என்கிறார்கள். அதோடு படத்தின் தயாரிப்பாளரே, பட்ஜெட்டைப் பற்றியும், மற்ற சில விஷயங்களையும் அவராகவே தன்னிச்சையாக ஒரு சில பத்திரிகையாளர்களை அழைத்து தகவல்களைச் சொல்லியிருக்கிறார். அவர் சொன்னபடி படத்தின் பட்ஜெட் 150 கோடி எல்லாம் இல்லை, வெறும் 100 கோடிக்குள்தான் என ஒற்றைப் பட பிரம்மாண்ட இயக்குனர் சமீபத்திய பேட்டி ஒன்றின் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார்.
பொதுவாகவே, எந்தப் படத்தைப் பற்றியும் வெளியீட்டிற்கு முன் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் பத்திரிகையாளர்களைச் சந்தித்து எந்த தகவலையும் சொல்ல மாட்டார்கள், படத்தின் இயக்குனர்தான் அவற்றைப் பற்றிப் பேசுவார். ஆனால் ஒற்றைப் பட விருது தயாரிப்பாளர் தொடர்ந்து பத்திரிகைகளுக்கு செய்தி வழங்கி வருவதும் இயக்குனருக்கு எரிச்சலை ஏற்படுத்தியருக்கிறதாம். படத்தின் பட்ஜெட்டைப் பற்றி இயக்குனர் அப்படியே குறைத்துப் பேசியது தயாரிப்பாளருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம். ஒன்றிரண்டு கோடிகள் பட்ஜெட்டில் அதிகமாகச் சொன்னால் பரவாயில்லை, பாதிக்குப் பாதி தயாரிப்பாளர் அதிகமாகச் சொல்லி எங்கே தனது பெயரை கெடுத்து விடுவாரோ என்று நினைத்துதான் இயக்குனர் உண்மையான பட்ஜெட்டை வெளியில் சொன்னார் என கோலிவுட் வியாபாரப் புள்ளிகள் தெரிவிக்கிறார்கள்.