ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒரு முன்னணி தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சிகள் ஆரம்பித்து பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த நேரம். அப்போது ஒரு நிகழ்ச்சியில் சிம்பு நடுவராக இருந்தார். அந்த நிகழ்ச்சியில் பப்லு நடனம் ஆடினார். ஆனால் பப்புலுவின் நடனம் சரியில்லை என்று அவரை வெளியேறச் சொன்னார் சிம்பு. ஆனால் நான் நன்றாகத்தான் ஆடினேன் உங்களுக்குத்தான் நடனத்தை பற்றி தெரியவில்லை என்று பப்லு வாதம் பண்ணினார். இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இது குறித்து அப்போது இருவருமே பேச மறுத்து விட்டனர்.
இந்த நிலையில் பல வருடங்களுக்கு பிறகு "அது நாங்கள் பேசி வைத்து நடத்திய நாடகம்" என்று பப்லு கூறியிருக்கிறார். இது குறித்து சிம்பு கூறும்போது: அவர் பேசி வைத்து செய்தாரா என்பது எனக்குத் தெரியாது. என் தரப்பு நிஜமானது. எனது கோபம் நியாமானது உண்மையானது. அந்த நிகழ்வைகூட ஒளிபரப்பலாமா என்று என்னிடம் கேட்டுத்தான் ஒளிபரப்பினார்கள். பப்லு ஒரு காமெடிக்காக சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன்" என்கிறார் சிம்பு.