இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாலிவுட் நடிகைகள் தொடங்கி வைத்த உடம்பில் பச்சைக் குத்திக்கொள்ளும் டாட்டூ கலாச்சாரம் சமீபகாலமாக தென்னிந்தியாவிலும் பரவிக்கிடக்கிறது. த்ரிஷா, ஸ்ருதிஹாசன், ஸ்ரேயா உள்பட பல நடிகைகள் தங்கள் உடம்பில் பச்சை குத்தியுள்ளதை போட்டோ எடுத்து இணையதளங்களில் வெளியிட்டும் வருகின்றனர். இந்த டாட்டூவினால் தோள் நோய்கள் ஏற்படும் என பலர் அறிவுறுத்தியபோதும், டாட்டூ கலாச்சாரமானது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்த நிலையில், பூஜை படத்தையடுத்து சுந்தர்.சியின் ஆம்பள படத்தில் நடித்து வரும் நடிகர் விஷாலும் தற்போது தனது தோளில் பெரிய அளவில் ஒரு பச்சைகுத்தியுள்ளார். தனது வலது கை தோளில் வரைந்துள்ள இந்த டாட்டூவை தற்போது இணையதளத்திலும் வெளியிட்டிருக்கிறார் விஷால். ஆனால் இது தன்னை அழகுபடுத்திக்கொள்வதற்காக அவர் வரைந்து கொள்ளவில்லையாம்.
ஆம்பள படத்தில் இடம்பெறும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த காட்சிக்காக வரைந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த டாட்டூ மூலம் புத்திமதி சொல்கிறார்களா? அல்லது பெண்களை கவருவதற்காக அவர் இப்படி டாட்டூவை தனது உடம்பில் விஷால் வரைந்து கொள்கிறாரா? என்பது பற்றிய விவரம் தெரிவிக்கப்படவில்லை. ஆக, விஷால் ஆரம்பித்து வைத்த இந்த டாட்டூ கலாச்சாரம் இனிமேல் கோலிவுட் நடிகர்கள் வட்டாரத்திலும் பரவ வாய்ப்பிருக்கிறது.