ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த மாதம் காஷ்மீரில் கொட்டிய கனமழையினால் டோட்டல் மாநிலமே சின்னாபின்னமாகிக் கிடக்கிறது. அதனால் அரசாங்கம் ஒரு பக்கம், தொண்டு நிறுவனங்கள் இனனொரு பக்கம் என காஷ்மீருக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள். இருப்பினும் இன்னும் நிறைய உதவிகள் தேவைப்படுகிறதாம். அதனால் சில புதிய சமூக சேவை நிறுவனங்களும் தற்போது உதயமாகியிருககின்றன. அதில், ஈமா என்ற தொண்டு நிறுவனமும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிறுவனம் சார்பில் சென்னை, மும்பை, ஐதராபாத், கொல்கத்தா, ஜெய்ப்பூர் ஆகிய முக்கிய நகரங்களில் நிதி திரட்டும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. முதலாவதாக சென்னையில் வருகிற 18-ந்தேதி ஸ்ரீ முத்தா வெங்கடசுப்பாராவ் அரங்கில் கலை நிகழ்ச்சி நடக்கிறது. அதில் நடிகையும் பின்னணி பாடகியுமான ஆண்ட்ரியா மற்றும் நடிகை ராய் லட்சுமி, பாடகர்கள் ஸ்ரீனிவாஸ், ஹரிசரண், ராகுல் நம்பியார் உள்பட பலர் கலந்து கொள்கிறார்களாம். பாட்டு, ஆட்டம் பாட்டம் என்று பார்வையாளர்களை கவரப்போகிறார்களாம்.
இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக, தனது படப்பிடிப்புகளையெல்லாம் கேன்சல் செய்து விட்டு முழுவீச்சில் இதில் கலந்து கொள்கிறாராம் ஆண்ட்ரியா. இதுபற்றி அவர் கூறுகையில், உருக்குலைந்து கிடக்கும் காஷ்மீரை பழைய நிலைக்கு கொண்டு வர அனைவருமே நம்மால் ஆன உதவியை செய்ய வேண்டும். அந்தவகையில், இந்த நிகழ்ச்சி மூலம் காஷ்மீரின் துயர் துடைப்புக்காக நிதி திரட்டுவதில் என்னை முழுசாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.