ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இயற்கைப் பேரிடர் நிகழும்போதெல்லாம் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு ஓடோடிச் சென்று உதவி செய்வதில் திரையுலகத்தினருக்கு நிகர் வேறு யாருமில்லை. காஷ்மீரில் கடந்த மாதம் கொட்டி தீர்த்த பெரும் மழை காரணமாக காஷ்மீர் மாநிலமே வெள்ளக்காடாகிவிட்டது. காஷ்மீரையும், அங்குள்ள மக்களையும் மீட்டெட்டுக்கும் முயற்சியில் அரசாங்கம் ஒரு பக்கம் ஈடுபட்டாலும், இன்னொரு பக்கம் 'ஈமா' எனும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் என்டர்டெய்ன்மென்ட் அசோஸியேஷன் என்ற அமைப்பும் இறங்கியுள்ளது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக வரும் 18-ஆம் தேதி சென்னையில் உள்ள ஸ்ரீமுத்தா வெங்கட சுப்பாராவ் அரங்கில் பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் நடிகைகள் ஆண்ட்ரியா, ராய்லட்சுமி, பாடகி சக்திஸ்ரீ கோபாலன், பாடகர்கள் ஸ்ரீனிவாஸ், ஹரிச்சரண், ரஞ்சித், ராகுல் நம்பியார், திருச்சூர் சகோதரர்கள் உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு பாடல்களை பாடவும், நடனம் ஆடவும் இருக்கிறர்கள். இதற்காக 500 ரூபாய் முதல் 1250 ரூபாய் வரையிலான டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது.
இந்நிகழ்ச்சி சென்னையில் மட்டுமல்லாது மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களிலும் ஒரே நேரத்தில் நடைபெறவுள்ளது. அந்தந்த மாநில நிகழ்ச்சிகளில் அம்மாநில கலைஞர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். இந்த நிகழ்ச்சிகள் மூலம் திரட்டப்படும் மொத்த நிதியை காஷ்மீரின் துயர்துடைப்பு பணிக்கு வழகப்பட இருக்கிறது 'ஈமா' நிறுவனம்.