பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பொதுவாக மலையாளிகள், மலையாள படங்கள் தவிர்த்து அதிகம் பார்ப்பது தமிழ் மற்றும் இந்திப் படங்களைத்தான். ஆங்கில படங்கள் அதற்கு அடுத்த இடம்தான். எந்த இந்திப் படமாக இருந்தாலும் அது டப் செய்யப்படாமல் நேரடியாக கேரளாவில் திரையிடப்படும். கேரள மக்கள் மூன்றாவது மொழியாக இந்தி படிப்பதால் நேரடி இந்திப் படங்களை பார்ப்பார்கள். என்றாலும், இந்திப் படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டால் தமிழ் டப் வெர்சனிலும், இந்தி வெர்சனிலும் திரையிடப்படும். அப்படித்தான் திரையிடப்பட்டது ஹிருத்திக் ரோஷன், கத்ரினா கைஃப் நடித்த பேங் பேங்.
இதுவரை இல்லாத அளவிற்கு 105 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. கொச்சியில் ரிலீசான முதல் நாள் மட்டும் 40 காட்சிகள் ஹவுஸ்புல்லாக ஓடியிருக்கிறது. ஒரு வார முடிவில் கேரளாவில் 4 கோடி வசூலித்து சாதனை படைத்திருக்கிறது பேங் பேங். இதுவரை எந்த இந்திப் படமும் படைத்திராத சரித்திர சாதனையாகும். அதோடு மலையாள சூப்பர் ஸ்டார்கள் மோகன்லால், மம்முட்டி, திலீப் குமாரின் சாதனைகளையும் நெருங்கி இருக்கிறது. பேங் பேங்க. மொத்தம் கேரளாவில் 10 கோடி வரை பேங் பேங் வசூலிக்கும் என்கிறார்கள். கேரள ரசிகர்களுக்கு ஹிருத்திக் ரோஷன் வீடியோ அறிக்கை மூலம் நன்றி தெரிவித்திருக்கிறார்.