டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தெளிந்த நீரோடை போன்று கதை சொல்லிக் கொண்டிருந்த சினிமாவில் திரைக்கதை என்ற வடிவத்தை உருவாக்கியவர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த அகிரா குரோசேவா. படம் தொடங்கிய 20 நிமிடத்துக்குள் கதை சொல்ல வேண்டும். இடைவேளையில் ஒரு திருப்பம் வேண்டும். கடைசியில் கிளைமாக்ஸ் இருக்க வேண்டும். இதெல்லாம் அகிரா கட்டமைத்த திரைக்கதை வடிவம். சினிமா இயக்குனர்களின் ஆதர்ஷன இயக்குனர்.
அவரின் திரைப்படங்களை கொண்ட திரைப்பட விழா நேற்று (அக் 14) சென்னை எம்.எம்.தியேட்டரில் தொடங்கியது. தி ஜப்பான் பவுண்டேஷன், இந்தோ சினி அப்ரிஷியேஷன், தி மெட்ராஸ் பிலிம் சொசைட்டி இணைந்து இதனை நடத்துகிறது. துவக்க விழாவில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் சசிகுமார், தி ஜப்பான் பவுண்டேஷன் அமைப்பின் தலைவர் மசநோரி நகானா, நடிகை ரேஷ்மா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் வருகிற 19ந் தேதி வரை மாலை 6 மணிக்கு அகிரா குரோசேவாவின் புகழ்பெற்ற படங்களான செவன் சாமுராய், ரெட்பிரட், ரேஷ்மேன், ஹய் அண்டு லோ, ஓய்ஜெம்போ, சஞ்ரோ ஆகிய படங்கள் திரையிடப்படுகிறது.