ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த மாதம் மலேசியாவில் நடைபெற்ற சைமா விருது வழங்கும் விழாவிற்கு சென்றிருந்தார் நடிகர் சிம்பு. அங்கே வந்திருந்த கன்னட நடிகை ஹர்ஷிகா பூனாச்சாவுடன் இன்ஸ்டன்ட் நட்பு ஏற்பட, சென்னை திரும்பும்வரை அவருடனேயே ஊர் சுற்றி இருக்கிறார் சிம்பு. இருவரும் இணைந்து போட்டோவும் எடுத்துக் கொண்டார்களாம். சிம்பு - ஹர்ஷிகா இருவரும் எடுத்துக் கொண்ட போட்டோக்கள் இணையதளங்களில் வெளிவந்தன. அப்போது, அதை சம்மந்தப்பட்ட இருவருமே சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. அதன் பிறகு சில நாட்கள் கழித்து சிம்பு - ஹர்ஷிகா இருவரும் முத்தம் கொடுத்துக்கொள்ளும் போட்டோக்கள் இணையதளங்களில் வெளியானது.
சிம்பு, பூனாச்சா வீடியோ என்ற பெயரில் வீடியோவும் வெளியானது. போட்டோவில் இருந்த சிம்பு, ஹர்ஷிகா அணிந்திருந்த அதே கலரில், அதே உடைகளில் அந்த வீடியோவில் இருவ்ரும் இருந்தனர். இதுகுறித்து நடிகர் சிம்புவிடம் அப்போது கருத்து கேட்கப்பட்டபோது, நான் சம்பந்தப்படாத ஒரு வீடியோவைப் பற்றி கருத்துக்கூற என்ன இருக்கிறது? என நழுவினார்.
இந்நிலையில், முத்த விவகாரம் பற்றி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நடிகை ஹர்ஷிகா காட்டமாக ஒரு கருத்தை பதிவு செய்திருக்கிறார். சைமா முத்த வீடியோ என்ற பெயரில் கீழ்த்தரமான வீடியோ ஒன்று வெளிவந்தபோது, அதைப் பற்றி கருத்துக்கூறாமல் தவிர்த்து வந்தேன். ஆனால், அப்படியும் அவர்கள் அந்த வீடியோவைப் பரப்புவதை நிறுத்தவதாக இல்லை. இதனால், இப்போது நான் எல்லோருக்கும் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள நினைக்கிறேன்... சம்பந்தப்பட்ட வீடியோவில் இருப்பது நிச்சயமாக நான் இல்லை. வேலையில்லாத சில விஷமிகளால் மார்ஃபிங் முறையில் அந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த வீடியோவைப் பரப்புபவர்கள் பப்ளிசிட்டிக்காக இப்படி கீழ்த்தரமான வேலைகள் செய்வதை நிறுத்திவிட்டு, பிரயோஜனமாக எதையாவது செய்யுங்கள்! என கொந்தளித்துள்ளார் ஹர்ஷிகா.