இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? |
கே.பாலசந்தர் இயக்கிய 'டூயட்' படம் மூலம் தமிழ்த் திரையுலகில் வில்லனாக அறிமுகமானவர் பிரகாஷ்ராஜ். தொடர்ந்து பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்திரக் கதாபாத்திரங்களிலும் நடித்து சிறந்த நடிகர் என்ற பெயரை எடுத்து தமிழில் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தியிலும் நடித்து வருகிறார். அதோடு “தோனி, உன் சமையலறையில்” உள்ளிட்ட படங்களையும் இயக்கினார். அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்ற அளவிற்கு எண்ணற்ற கதாபாத்திரங்களில் நடித்து விட்டார், நடித்தும் வருகிறார்.
தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்தப் படத்தில் 'வாயை மூடிப் பேசவும்' படத்தில் நாயகனாக நடித்த மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் நாயகனாகவும், நித்யா மேனன் நாயகியாகவும் நடிக்க உள்ளார்கள். பிரபல ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். இந்தப் படம் குறித்து பேசிய பிரகாஷ் ராஜ், “துல்கர் சல்மான், நித்யா மேனன் போன்ற இளம் நடிகர்களுடன் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மணிரத்னம், பி.சி.ஸ்ரீராம் ஆகியோருடன் இந்த வாழ்க்கை மிகவும் உயர்ந்தது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்பைப் போல் பிரகாஷ்ராஜ் தமிழில் பல படங்களில் நடிப்பது கிடையாது. மிகவும் தேர்வு செய்துதான் நடித்து வருகிறார். வில்லனாக நடிப்பதைக் கூடத் தவிர்த்து அதிகமான குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். “மொழி, அபியும் நானும், தோனி, உன் சமையலறையில்” ஆகிய படங்கள் அவருடைய நடிப்பின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டிய படங்களாக அமைந்தன. மணிரத்னம் இயக்கத்தில் அவர் மீண்டும் நடிப்பது அவரை இன்னும் ஒரு பரிமாணத்தில் காட்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.