‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தெலுங்கிலும் தோல்வி, ஹிந்தியிலும் தோல்வி என சமீப காலமாக அதிர்ஷ்டம் இல்லாமல் தவித்து வரும் நடிகையாக இருக்கிறார் தமன்னா. தற்போது ராஜமௌலி இயக்கத்தில் 'பாகுபலி' தெலுங்குப் படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். தமிழில் ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா ஜோடியாக நடிக்க உள்ளார், ஆனால், அந்தப் படம் இன்னும் ஆரம்பமாகவேயில்லை.
இதனிடையே, 'பாகுபலி' படத்தில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்த தமன்னாவிற்கு இயக்குனர் சிறிது ஓய்வெடுத்துக் கொள்ளும்படி பிரேக் கொடுத்திருக்கிறாராம். இந்த ஓய்வு நேரத்தில் தமன்னா விளம்பர நிகழ்ச்சிகளிலும், விளம்பரப் படப்பிடிப்புகளிலும் கலந்து கொள்ள உள்ளார். நேற்று கூட சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். படங்களில் நடிக்கும் போது இசை வெளியீட்டிற்கோ, பத்திரிகையாளர் சந்திப்புகளுக்கோ வராத நடிகைகள் இம்மாதிரியான விளம்பர நிகழ்ச்சிகளுக்கு மட்டும் தவறாமல் கலந்து கொள்கிறார்கள்.
அஜித் ஜோடியாக 'வீரம்' படத்தில் நடித்த போது தமன்னா, அந்தப் படத்தின் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹிந்தி, தெலுங்கில் சரியான வெற்றி கிடைக்காததால் ஆர்யா ஜோடியாக நடிக்கும் படத்தின் மூலம் மீண்டும் தமிழிலும் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளாராம் தமன்னா.
இப்போது சென்னை வந்திருப்பது கூட மேலும் சில பல இயக்குனர்களைச் சந்திப்பதற்குத்தான் என்றும் சொல்கிறார்கள்.