ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
'ஹுட் ஹுட்' புயலால் ஆந்திர மாநிலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டிணம் உட்பட ஆந்திர கரையோரத்தின் பல பகுதிகள் பலத்த சேதம் அடைந்துள்ளன. இதையடுத்து தெலுங்கு நட்சத்திரங்கள் பலரும் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு, நன்கொடையை தாராளமாக வழங்கி வருகின்றனர்.
பவன் கல்யாண் 50 லட்ச ரூபாய், நடிகர் கிருஷ்ணா குடும்பத்திலிருந்து மகேஷ் பாபு 25 லட்ச ரூபாய், கிருஷ்ணா 15 லட்ச ரூபாய், விஜயநிர்மலா 10 லட்ச ரூபாய் வழங்கியுள்ளனர். தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் 25 ரூபாய் வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
ஜுனியர் என்டிஆர் 20 லட்சம், பிரபாஸ் 20 லட்சம், அல்லு அர்ஜுன் 20 லட்சம், ராம்சரண் 15 லட்சம், ரவி தேஜா 10 லட்சம், அல்லரி நரேஷ் 5 லட்சம் என பலரும் நிவாரண நிதி வழங்கி வருவதோடு அவர்களது ரசிகர்களை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று உதவிகளை வழங்குமாறும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் பலரும் நன்கொடை வழங்கி வருகின்றனர்.
நடிகர் சிரஞ்சீவி புயலால் பாதிக்கப்பட்ட விசாகப்பட்டிணம், விஜய நகரம், ஸ்ரீகாகுளம் உள்ளிட்ட பகுதிகளை இன்று பார்வையிட உள்ளார்.