'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கேரளாவில் வீடுகளுக்கு சோலார் பேனல் அமைத்துத் தருவதாக சொல்லி மோசடியில் ஈடுபட்டவர் நடிகை சரிதா நாயர். தொலைக்காட்சி நடிகையான இவர், பெண் தொழிலதிபரும்கூட. அவரது இந்த மோசடியில் பல அரசியல்வாதிகளுக்கும் பங்கு இருந்தது. என்றாலும் அவர்களெல்லாம் அதிகார பலத்தை கொண்டு தப்பித்து விட்டதோடு, சரிதா நாயரை சிக்க வைத்து ஜெயிலுக்குள் தள்ளி விட்டனர். அதனால் பல மாதங்களுக்குப்பிறகு சமீபத்தில்தான் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார் சரிதாநாயர்.
அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி எம்.பி அப்துல்லா குட்டி என்பவர் மீது பாலியல் புகார் கூறிய சரிதா நாயர், தன்னுடன் நெருக்கமாக இருந்த மேலும் சில அரசியல் புள்ளிகள் பற்றிய தகவல்களை விரைவில் வெளியிடுவதாகவும் பரபரப்பு செய்தி வெளியிட்டார். இதன் காரணமாக கேரளா அரசியல்வாதிகள் கடும் கலவரம் அடைந்தனர். யார் யாரது பெயரை சரிதா நாயர் வெளியிடப் போகிறாரோ என்று பொதுமக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்புகள் நிலவின.
இந்த நிலையில், சரிதா நாயரை ஆப் பண்ணும் முயற்சியாக, அவருக்கு எதிரான அரசியல்வாதிகள் அவரது நிர்வாண வீடியோவை இணைதளங்களில் பரவ விட்டுள்ளார்கள். இந்த தகவல் சரிதா நாயரின் காதுக்கு சென்றதையடுத்து அதிர்ச்சியில் ஆடிப்போயிருக்கிறார். அதேசமயம் இது தனக்கு எதிரான அரசியல்வாதிகள் செய்யும் வேலைதான் என்பதை புரிந்து கொண்ட அவர், என் வாயை அடைக்க வேண்டும் என்பதற்காக இந்த மாதிரியான அசிங்கமான செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால், இதை வெளியிட்டவர்கள் மீது நான் நடவடிக்கை எடுப்பேன். அதோடு, என்னை இப்படி அவமானப்படுத்தியவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டாமல் விடமாட்டேன் என்றும் ஆவேசமாக பேட்டி கொடுத்துள்ளார் சரிதா நாயர்.