ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இந்தியில் எண்டர்டெயின்மெனட், தெலுங்கில் ஆகடு படங்களில் நடித்து முடித்த பிறகு தமன்னாவின் கைவசம் படங்கள் இல்லை. தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் நடித்த ஆகடு வெற்றி பெற்றிருந்தால் புதிய படங்கள் ஒன்றிரண்டு கமிட்டாகியிருககும். ஆனால் படம் படுதோல்வியடைந்ததால் அதையடுத்து அங்குள்ள பட அதிபர்கள் தமன்னா பக்கமே திரும்பவில்லையாம்.
தமிழில் உதயநிதி-நயன்தாரா நடித்து வரும் நண்பேன்டா படத்திலும் கெஸ்ட் ரோலில் நடித்து முடித்து விட்டார். அதையடுத்து, தெலுங்கில் ராஜமவுலியின் பாகுபலி படத்திலும் தமன்னா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாம்.
ஆனால், இதன்பிறகு அவருக்கு புதிய படங்கள் எதுவுமே கைவசம் இல்லையாம். அடுத்தபடியாக ராஜேஷ்.எம் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படம்தான் உள்ளதாம். அதனால் தற்போது தனது தாய்வீடான மும்பைக்கு சென்று பெற்றோர் மற்றும் தோழிகளுடன் ஜாலியாக பொழுதை கழித்துக்கொண்டிருக்கிறார் தமன்னா.
ஒருவேளை அடுத்த மாதம் ஆர்யா நடிக்கும் படவேலைகள் தொடங்கப்படவில்லை என்றால், குடும்பத்துடன் வெளிநாடுகளுக்கு டூர் செல்லவும் திட்டமிட்டுள்ளாராம் தமன்னா. கடந்த பல வருடங்களாக தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் ஓய்வில்லாமல் நடித்துக்கொண்டிருந்த தமன்னா, அடுத்தபடியாக தென்னிந்தியாவில் சரியான படவாய்ப்புகள் கிடைக்காதபட்சத்தில் த்ரிஷா பாணியில் கன்னட சினிமாவை முற்றுகையிடவும் திட்டமிட்டுள்ளாராம்.