பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
தமிழில் விடுதலைப்புலிகளை மையப்படுத்தி அவ்வப்போது படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில், தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ள படம் புலிப்பார்வை. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் வாழ்க்கையை மையக்கருவாகக் கொண்டு இப்படம் உருவாகியிருக்கிறது. ஆனால், அந்த படத்திற்கு எதிர்ப்புகள் எழுந்ததால் சில அமைப்புகளுக்கு படத்தை போட்டுக்காண்பித்தனர். அப்போது , அதிருப்திக்குரிய காட்சிகள் என்று சுட்டிக்காட்டியதை நீக்கி விட்டு படத்தை வெளியிட தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், தற்போது இந்திய அமைதிப்படை இலங்கைக்கு சென்றபோது அதை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்து இறந்த விடுதலைப்புலி திலீபனின் வாழ்க்கை கதையை படமாக்குகிறார்கள். திலீபனாக நந்தா நடிக்கும் அப்படத்தில் பிரபாகரனாக ஸ்ரீதர் என்பவர் நடிக்கிறார். அதோடு, அந்த இயக்கத்தில் முக்கியமானவர்களான கிட்டு, மாத்தையா, மில்லர் ஆகியவர்களின் கதாபாத்திரங்களும் இப்படத்தில் முக்கியத்துவம் பெறுகிறதாம்.
மேலும், திலீபன் இலங்கையில் வாழ்ந்த வீடு மற்றும் அவர் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த காட்சிகள், திலீபன் இறந்ததை அடுத்து முதன்முறையாக பிரபாகரன் கண்ணீர் விட்டு அழுதது போன்ற மிக தத்ரூபமான காட்சிகள் நிறைய இப்படத்தில் இடம்பெறுகிறதாம். இதுதவிர திலீபன் பற்றிய வெளிவராத தகவல்களை அவரது உறவினர்கள் மூலமே சேகரித்து இந்த படத்தை எடுக்கிறாராம் இயக்குனர் ஆனந்த் மூர்த்தி.
இப்படமும் சர்ச்சையில் சிக்குமா? இல்லை சத்தமில்லாமல் திரைக்கு வருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.