‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
பள்ளி ஆசிரியையின் மீது 10 வயது மாணவனுக்கு ஈர்ப்பு ஏற்படுவது போன்று தற்போது தெலுங்கில் ஒரு படம் இயக்கியிருக்கிறார் ராம்கோபால்வர்மா. இதற்கு முதலில் சாவித்ரி என்று பெயர் வைத்திருந்தார். அதோடு அப்படத்தின் போஸ்டர்களை அவர் ஆந்திராவில் வெளியிட்டபோது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆசிரியைகளை அவமானப்படுத்தி விட்டதாக பல்வேறு அமைப்புகள் கொடிபிடித்தன.
அது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, பின்னர் சாவித்ரி என்ற தலைப்பை வேறொரு நிறுவனம் பதிவு செய்து வைத்திருப்பதாக அறிந்து ஸ்ரீதேவி என்று அப்படத்தின் தலைப்பை மாற்றினார் ராம்கோபால் வர்மா. இதனால் நடிகை ஸ்ரீதேவி அதிர்ச்சியடைந்தார். ஒரு ஆபாச படத்துக்கு என் பெயரை வைப்பதா? என்று அதை எதிர்த்து கோர்ட்டுக்கு சென்றுள்ளார்.
அதோடு, ராம்கோபால் வர்மாவை தொடர்பு கொண்டு அந்த படத்துக்கு என் பெயரை வைக்காதீர்கள் என்று பர்சனலாக ஸ்ரீதேவி கேட்டுக்கொண்டாராம். அதற்கு நான் நடிகை ஸ்ரீதேவியைப்பற்றி அந்த படத்தில் கதை சொல்லவில்லை. ஸ்ரீதேவி என்ற ஆசிரியைப்பற்றிதான் சொல்லியிருக்கிறேன். அதனால் உங்களது பெயருக்கு எந்தவித களங்கமும் ஏற்படாது என்று கூறிய ராம்கோபால்வர்மா, எக்காரணம் கொண்டு ஸ்ரீதேவி என்ற இந்த தலைப்பை மாற்ற மாட்டேன் என்று உறுதிபட தெரிவித்து விட்டாராம்.