மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பவர் ஸ்டாருக்கு எல்லாம் முன்னோடியாக விளங்கியவர் ஜே.கே.ரித்தீஷ்!
ராமநாதபுரத்திலிருந்து கோடம்பாக்கம் வந்த முகவை குமார், தன் பெயரை ஜே.கே.ரித்தீஷ் என்று மாற்றிக் கொண்டு கானல் நீர் என்ற படத்தை தயாரித்தார்!
அந்தப்படத்தில் அவரும் ஒரு ஹீரோவாக நடித்தார்.
தொடர்ந்து, நாயகன் என்ற படத்தை தயாரித்து ஸோலோ ஹீரோவானார். அதுவரை ஜே.கே.ரித்தீஷ் என்றால் எவருக்குமே தெரியாது.
யார் கொடுத்த ஐடியாவோ...பரபரப்பாக களத்தில் இறங்கினார்.
பிச்சைக்காரனுக்கு பத்தாயிரம், நடிகர் சங்கம் உட்பட திரைப்படத்துறையில் உள்ள அனைத்து சங்கங்களுக்கும் லட்சக்கணக்கில் நன்கொடை என பணத்தை வாரி இறைத்தார்.
இப்படித்தான் கோடம்பாக்கத்தில் புதிய வள்ளலாக உருவெடுத்தார் ஜே.கே.ரித்தீஷ்!
அவரது பணபலத்தை தெரிந்து கொண்டு பலரும் ரித்தீஷை சுற்றி வந்தனர்.
ஏகப்பட்ட செலவு செய்து தன்னைச்சுற்றி ஒரு கூட்டத்தை ஏற்படுத்தினார்.
கருப்பு சஃபாரி போட்ட பவுன்சர்களையும் தன் பின்னால் நிற்க வைத்தார்.
ஏறக்குறைய ஒரு வருடத்துக்குள் திரையுலகில் முக்கியமான பிரமுகராக உருவெடுத்த ரித்தீஷ், அடுத்து குறி வைத்தது அரசியலை.
பெரும்தொகையை செலவு செய்து தி.மு.க.வில் சீட் வாங்கி எம்.பி. தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
எம்.பி.யான பிறகு கோடம்பாக்கத்துக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு போனவர்தான்....பல வருடங்கள் கழித்து மீண்டும் சினிமா பக்கம் வந்திருக்கிறார்.
ஜே.எம்.ஆரூணின் உதவியாளராக இருந்து தற்போது வாலி என்று பெயரை மாற்றிக் கொண்டு குற்றாலம் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
வாலி நடித்துள்ள குற்றாலம் படம் பல வருடங்களாக கிடப்பில் கிடந்தது. அந்தப் படத்தை வாங்கி வெளியிடுகிறார் ஜே.கே.ரித்தீஷ்!
குற்றாலம் படத்தை அடுத்து தானே ஹீரோவாக நடிக்கும் படத்தைத் தயாரிக்க இருக்கிறாராம்.