தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'லிங்கா, அஜித் நடிக்கும் படம் வெளிவரும் வரை அனுஷ்கா பற்றி தினம் தினம் ஏதாவது ஒரு செய்தி வந்து கொண்டேதானிருக்கும். 30 வயதைக் கடந்த பின்னும் அதிர்ஷ்டமான நடிகைகள் என்ற பட்டியலில் அனுஷ்காதான் முன்னணியில் இருக்கிறார். ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்கள் ஒரு சிலருக்குத்தான் கிடைக்கும். அந்த விதத்தில் அனுஷ்கா அதிர்ஷ்டசாலிதான். இதற்கு முன் 'அருந்ததி' படம் அவருடைய நடிப்புத் திறமையை வெளிக்காட்டிய படமாக அமைந்தது. தற்போது ஒரே நேரத்தில் “பாகுபலி, ருத்ரமாதேவி” ஆகிய படங்களிலும் அவருக்குத்தான் முக்கியத்துவம் அதிகம். அதே சமயத்தில் ரஜினியுடனும், அஜித்துடனும் ஒரே நேரத்தில் நடிக்கும் பாக்கியமும் அவருக்குக் கிடைத்துள்ளது.
அனுஷ்கா அவர் முடிவெடுக்கும் விஷயத்தைப் பற்றி சமீபத்தில் ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறார். ஒரு விஷயத்தில் முடிவெடுக்க வேண்டும் என்றால் அதை ஒன்றுக்கு பல முறை யோசிக்கவே மாட்டாராம். மற்றவர்களைப் போல் அதில் நல்லது இருக்கிறதா, கெட்டது இருக்கிறதா என ஆராய்ந்து பார்த்து முடிவெடுப்பதைத் தள்ளிப் போடவே மாட்டாராம். எதைப் பற்றியும் உடனே முடிவெடுத்து விடுவாராம். ஒரு விஷயத்தில் முடிவெடுத்து விட்டால், அதன் பின் அதைப் பற்றியும் யோசித்துக் கொண்டே இருக்க மாட்டாராம். சரியோ, தப்போ எடுத்த முடிவில் மாற்றம் செய்து கொள்ளாமல் இருப்பாராம். அவருடைய தோழிகளும் இதைப் பின்பற்றி நடந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்வதுண்டாம். சினிமாவிற்கு வருவதற்கு முன் கூட கொஞ்சம் யோசித்தாராம், ஆனால் அதன் பின் அதைப் பற்றி ஒரு நாள் கூட சிந்தித்துப் பார்த்ததில்லை என்கிறார்.