ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பூ, மரியான் படங்களில் நடித்துள்ள பார்வதி மேனன், அடுத்து கமலின் உத்தமவில்லன் படத்திலும் ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். இருப்பினும் தனது திறமைக்கு சரியான வாய்ப்புகள் தமிழில் கிடைக்காததால் தாய்மொழியான மலையாளத்திலேயே கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், தற்போது அவருக்கு ப்ருதிவிராஜ் நடிக்கும் என்னும் நிண்ட மொய்தீன் என்ற மலையாள படத்தில் நாயகி வேடம் கிடைத்துள்ளது.
ஏற்கனவே அங்கு பல படங்களில் நடித்திருந்தபோதும், இந்த படம் 1960ல் கோழிக்கோட்டில் வாழ்ந்த மொய்தீன்-காஞ்சனமாலா என்ற நிஜ காதலர்களைப் பற்றிய கதையில் உருவாவதால், அதிக ஈடுபாடு காட்டி நடித்து வருகிறார் பார்வதிமேனன். ஆனால், தற்போது அந்த காதல் ஜோடியில் ஒருவரான காஞ்சனமாலா தன்னைப்பற்றிய தவறான தகவல்களை சேகரித்து அந்த படத்தை எடுத்து வருவதாக எதிர்ப்பு தெரிவித்துள்ளாராம்.
அதோடு, எனது காதலை கொச்சைப்படுத்தும் வகையில் உண்மைக்கு மாறான விசயங்கள் இந்த படத்தில் இடம்பெற்றிருந்தால், அப்படம் திரைக்கு வரும்போது நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விட்டுள்ளாராம். இதனால் தான் அதிக எதிர்பார்ப்புடன் நடித்து வந்த படத்திற்கு இப்படியொரு எதிர்ப்பு வந்து விட்டதே என்று பலத்த அதிர்ச்சியடைந்துள்ளாராம் பார்வதிமேனன்.