பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழோ, தெலுங்கோ திரையுலகத்தினருக்கிடையே பல பிரச்சனைகள் சமீப காலமாக எழுந்து வருகின்றன. இதில் சமீபத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டது தெலுங்குத் திரையுலகம்தான். சில வாரங்களுக்கு முன் வெளிவந்த ஜுனியர் என்டிஆர் நடித்த 'ரபாஸா' தெலுங்குப் படமும், மகேஷ் பாபு நடித்த 'ஆகாடு' திரைப்படமும் படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களுக்கு பல கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அதனால், வினியோகதஸ்தர்கள் சங்கத்தினர் ஒன்றிணைந்து புதிதாக சில முடிவுகளை எடுத்திருக்கிறார்கள். அதன்படி படங்கள் நஷ்டம் வெளியானால் அந்த நஷ்டத்தில் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிக, நடிகையர் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
இது இயக்குனர்களிடையே கடும் எதிர்ப்பை சம்பாதித்திருக்கிறது. ஒரு படத்திற்கு தயாரிப்பாளர், இயக்குனரை நம்பி பல கோடி ரூபாய் முதலீடு செய்கிறார். வினியோகஸ்தர்களும் சில சமயங்களில் படத்தைப் பார்க்காமலேயே பல கோடி ரூபாய் கொடுத்து அந்தப் படத்தை வாங்கிவிடுகிறார்கள். ஒரு படத்தின் தோல்வி மற்றவர்களை விட இயக்குனர்களைத்தான் அதிகம் பாதிக்கிறது. ஒரு தோல்விப் படத்திற்குப் பின் இயக்குனர்களுக்கு அடுத்த படம் கிடைப்பதே பெரிய விஷயமாகிவிடுகிறது. அதோடு, அவர்களுக்கு சம்பளமும் சில சமயங்களில் சரியாகக் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. வினியோகஸ்தர்களின் புதிய முடிவால் சில முன்னணி இயக்குனர்கள் ஒன்று கூடிப் பேசி வருகிறார்களாம். இதை எப்படி சமாளிப்பது முறியடிப்பது என அவர்கள் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. அப்படி எந்த முடிவுக்கும் வராத நிலையில் தெலுங்குத் திரையுலகில் ஒரு முடக்கம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.