தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ராவணன் படத்தின் திருட்டு வி.சி.டி.களை ஒழிக்கும்படி, சென்னை போலீஸ் கமிஷனரிடம் நடிகை சுஹாசினி நேரில் சென்று புகார் கொடுத்தார். டைரக்டர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் ரிலையன்ஸ் பிக் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தமிழ், தெலுங்கு, இந்தியில் ராவணன் படம் எடுக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கிய இப்படத்தின் திருட்டு விசிடி சரளமாக உலா வந்து கொண்டிருக்கின்றன. இதனால் திருட்டு விசிடியை ஒழிக்கக்கோரி நடிகை சுஹாசினி மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கமிஷனர் ராஜேந்திரன், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதுபற்றி சுஹாசினி அளித்துள்ள பேட்டியில், ராவணன் மிகப்பெரிய படம். இந்த படத்துக்காக 3 ஆயிரத்து 200 பிரிண்டுகள் போடப்பட்டு உள்ளன. சினிமா படங்களின் திருட்டு வி.சி.டி.கள் உடனே வெளியாகிவிட்டால் அது ஒவ்வொருவருக்கும் எவ்வளவோ பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது. மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் திருட்டு வி.சி.டி.களை ஒழிப்பதற்கு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. திருட்டு விசிடி விற்கப்படுவது பற்றி கமிஷனரிடம் தெரிவித்தோம். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு இந்த படங்களின் திருட்டு வி.சி.டி.களை வைத்திருப்போர் ஒவ்வொருவரையும் கைது செய்வதற்கு உத்தரவிட்டார். இந்த படங்களின் திருட்டு வி.சி.டி. எங்குமே நடமாடாதபடி பார்த்து கொள்வதாகவும் அவர் உறுதி அளித்தார். திருட்டு வி.சி.டி.யை ஒழிப்பதற்கு தமிழ், தெலுங்கு உட்பட பல மாநிலத்தை சேர்ந்த சினிமா தொடர்புடைய அனைவரும் ஒன்று சேர்ந்து இயக்கமாக உருவாக்கினால்தான் வெற்றி பெற முடியும் என்று கமிஷனர் அறிவுறுத்தினார்.
புதுச்சேரியில்தான் இந்த படங்களை பிரிண்ட் போடுவதாக கேள்விப்பட்டோம். புதுச்சேரி முதல்-மந்திரி வைத்தியலிங்கம் எங்களுடன் பேசி, அவற்றை தடுப்பதாக கூறினார். அடுத்ததாக புதுச்சேரி செல்ல திட்டமிட்டுள்ளோம். பீகார், ஒரிசா, சண்டிகர் மாநிலங்களில் திருட்டு வி.சி.டி.களை ஒழித்துவிட்டனர். இணையதளத்தில் வெளியான ராவணன் படத்தை நவீன தொழில்நுட்பம் மூலம் தடுத்தோம். ஆனால் அவர்கள் வேறு இணைய தளத்தில் அவற்றை வெளியிடுகின்றனர். படம் எடுத்துவிட்டு, திருடர்கள் பின்னால் ஓட வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
தியேட்டர்களில் டிக்கெட் விலை உயர்வு காரணமாகவும் திருட்டு வி.சி.டி. தொழில் வளர்ச்சி அடைவதாக கூறினால், அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. படம் எடுக்கத்தான் எங்களுக்கு தெரியும். சினிமாத்துறை வாழ வேண்டுமென்றால் மக்கள் அனைவருமே எல்லா படங்களையும் தியேட்டருக்கு சென்று பார்க்க வேண்டும், என்று கூறினார்.
சுஹாசினியின் புகாரைத் தொடர்ந்து, இந்தப் படங்களின் திருட்டு டி.வி.டி.களை விற்பனை செய்கிறவர்களை கைது செய்யும்படி கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். இணை கமிஷனர்கள் சக்திவேல், சேஷசாயி ஆகியோர் நேரடி மேற்பார்வையில், அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்ய பல தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்தத் தனிப்படைகள் சென்னையின் பல பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில், ராவணன், சிங்கம் போன்ற சில புதிய சினிமா படங்களின் உரிமம் பெறாமல் டி.வி.டி.களில் திருட்டுத் தனமாக பதிவு செய்து விற்பனை செய்த 15 பேர் பிடிபட்டனர். புதிய சினிமா மற்றும் பல ஆபாசப் படங்களுக்கான 600 டி.வி.டி.கள் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டன.