ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்திற்கு பிறகு பாலக்காட்டு மாதவன், பொய் சொல்லாதேடி, அச்சமென்ன ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சோனியா அகர்வால். இதில் பாலக்காட்டு மாதவன் படத்தில் மடிசார் மாமியாக நடிக்கிறார் சோனியா. இதற்கு முன்பு தான் கதாநாயகியாக நடித்த படங்களில் இருந்து மாறுபட்டு பக்கா குடும்ப பெண்ணாக நடித்திருக்கும் இந்த படம் திரைக்கு வந்தால் தனக்கு வெயிட்டான கேரக்டர்கள் கிடைக்கும் என்று பல மாதங்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் சோனியா அகர்வால்.
ஆனால் எப்போதோ திரைக்கு வரவேண்டிய இந்த படம், நான்தான் பாலா படம் தோல்வியடைந்ததால் இந்த படத்தின் வேலைகள் மந்தமாகின. இருப்பினும், அந்த படம் தராத வெற்றியை இந்த படம் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் இதில் நடித்து முடித்துள்ளார். அதனால், சில மாதங்களாக சோர்வாக இருந்த சோனியா அகர்வால் தற்போது அப்படம் திரைக்கு வரப்போவதால் உற்சாகமாகியிருக்கிறார்.
மேலும், பாலக்காட்டு மாதவன் படத்தை இயக்கியுள்ள சந்திரமோகன் கூறுகையில், படத்தின் அனைத்துக்கட்ட வேலைகளும் முடிந்து ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. டிசம்பர் முதல் வாரத்தில் படத்தை வெளியிடுகிறோம் என்கிறார். அவரிடத்தில், டிசம்பர் 12-ந்தேதி ரஜினியின் லிங்கா வருகிறதே? என்று சொன்னால், லிங்கா படப்பிடிப்பே இன்னும் முடிவடையவில்லை. அதனால் அந்த படம் டிசம்பரில் வெளியாவது கஷ்டம். அந்த நம்பிக்கையில்தான் பாலக்காட்டு மாதவனை டிசம்பரில் வெளியிடுகிறோம் என்கிறார்.