'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வழக்கமான ஹீரோ கதைகளில் இருந்து மாறுபட்டு வித்தியாசமான கோணத்தில் கதைகளை செலக்ட் பண்ணி நடித்து வரும் விஜயசேதுபதி, சங்குதேவன் என்ற படத்திலும் வித்தியாசமான கதையில் நடித்தார். அந்த கதை தன்னை வெகுவாக பாதித்ததாகவும் அப்போது சொன்னார். அதன்காரணமாக, அதுவரை படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருந்த விஜயசேதுபதி, அந்த கதைக்காக தயாரிப்பாளராகவும் அவதரித்தார்.
ஆனால், அந்த படத்தை இயக்கிய புதுமுக இயக்குனர் சுதாகர் படமாக்கிய விதம் அவருக்கு பிடிக்கவில்லையாம். அதனால் அவர் சொன்ன கதை பிடித்து கமிட்டான விஜயசேதுபதி, இவர் படத்தை எப்படியும் சொதப்பி விடுவார் என்பதை அறிந்து, கதையை மட்டும் கொடுங்கள் நான் வேறு இயக்குனரை வைத்து டைரக்ட் செய்து கொள்கிறேன் என்றாராம்.
அதற்கு அந்த புதுமுக டைரக்டர் மறுத்து விட்டாராம். அதனால்தான் இந்த விஷப்பரீட்சையே வேண்டாமென்று 3 நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில், படத்தையே கிடப்பில் போட்டிருக்கிறார் விஜயசேதுபதி. ஆனால், சில மாதங்களுக்குப் பிறகு அந்த டைரக்டர் மீண்டும் விஜயசேதுபதியை தொடர்பு கொண்டு, இப்போது கதையை தருகிறேன். நீங்களே நடியுங்கள் என்றாராம். அதைக்கேட்ட விஜயசேதுபதி, சங்குதேவன் கதை மீது எனக்கு ஆர்வம் இருந்தபோது நீங்கள் தரவில்லை. ஆனால் இப்போது எனக்கு அநத கதை மீது சுத்தமாக ஆர்வம் போய் விட்டது என்று சொல்லி வாங்க மறுத்து விட்டாராம்.