ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சாமியார் நித்தியானந்தாவுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியான விவகாரத்தில் முக்கிய சாட்சியாக இருக்கும் ரஞ்சிதா, தொடர்ந்து போலீசுக்கு டிமிக்கி கொடுத்து வருகிறார். முதலில் நித்தியானந்தாவுடன் இருப்பது நான் இல்லை என்று மறுத்த ரஞ்சிதா, அதன் பின்னர் நான் நித்தியானந்தாவின் பக்தை, வீடியோ விவகாரத்தில் நடந்த உண்மைகளை போலீசிடம் தெரிவிப்பேன் என்று கூறினார். இரண்டு மூன்று முறை போலீசில் வாக்குமூலம் அளிக்க தயாராக இருப்பதாகவும், கால அவகாசம் வேண்டும் என்றும் கடிதம் அனுப்பியிருப்பதாக தகவல்கள் வெளியாயின.
இந்நிலையில் நடிகை ரஞ்சிதா இந்த விவகாரத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சுயசரிதை புத்தகமாக எழுத திட்டமிட்டிருக்க்கிறார். அவதூறுகளை கடந்து வாழ்வது எப்படி? என்ற தலைப்பில் எழுதப்போகும் இந்த புத்தகத்தல் கடந்த 6 மாதகாலமாக தான் சந்தித்து வரும் பிரச்னைகள் பற்றி எழுதவிருக்கிறாராம். மேலும் உல்லாச வீடியோ வெளியான விவகாரம் குறித்தும் விரிவாக எழுதப் போகிறாராம். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், "நான் எனது வாழ்வில் கடந்த 6 மாத காலமாக சந்தித்து வரும் அனுபவங்களை சுயசரிதை புத்தகமாக எழுதப்போகிறேன். எனது புத்தகம் வாழ்க்கையில் ஏற்படும் சொந்த பிரச்னைகளை தீர்க்க உதவும் வகையில் இருக்கும். இதுதொடர்பாக இரண்டு புத்தக பதிப்பாளர்களிடம் பேசியிருக்கிறேன். என் மீது சுமத்தப்பட்ட கட்டுக்கதை, பாரபட்சம் குறித்தும் எழுத உள்ளேன். நான் சக்திவாய்ந்த ஆன்மா பற்றி எழுதப் போகிறேன்" என்று கூறியுள்ளார்.
தலைமறைவு வாழ்க்கை பற்றிய கேள்விக்கு ஒரு நிமிடம் மவுனம் காத்த ரஞ்சிதா, நான் மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப் பட்டுள்ளேன். எனது உடல்நலம் சரியில்லை. இந்த விவகாரத்தால் நான் செயலற்ற நிலையில் இருக்கிறேன். பத்திரிகைகளில் என்னைப் பற்றிய ஏராளமான அவதூறு செய்திகள் வெளியாகியுள்ளன. நான் சொல்லாதவற்றையெல்லாம் நான் சொன்னதாக எழுதுகிறார்கள். விரைவில் சிபி-சிஐடி போலீசில் ஆஜராகி வீடியோ விவகாரம் பற்றி பேசுவேன்.
இந்த இக்கட்டான நிலையில் எனக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் கணவர், சகோதரிகள் மற்றும் பெற்றோர் இருந்தனர் என்று சொன்ன ரஞ்சிதா, சமீபத்தில் வெளியான ராவணன் படத்தில் நடித்திருந்தார். ஆனால் இதுவரை அவர் ராவணன் படம் பார்க்கவில்லையாம். சினிமாவில் இருந்து விலகியிருக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறியிருக்கிறார் ரஞ்சிதா.
வேறு ஏதாவது பட வாய்ப்புகள் வந்துள்ளதா? என்ற கேள்விக்கு, இப்போதைக்கு சினிமாவில் நடிப்பது பற்றி யோசிக்கவில்லை. எனக்கு ஒய்வு தேவைப்படுகிறது. சமூக சேவைகள் செய்ய ஆர்வமாக இருக்கிறேன், என்று கூறியுள்ளார்.
தலைமறைவு வாழ்க்கை நடத்தி வரும் ரஞ்சிதா, மேற்கத்திய ஸ்டைலில் பாப் கட்டிங் போட்டு வலம் வருகிறார் என்பது கூடுதல் தகவல்.