Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறார் ரஞ்சிதா!

27 ஜூன், 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

சாமியார் நித்தியானந்தாவுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியான விவகாரத்தில் முக்கிய சாட்சியாக இருக்கும் ரஞ்சிதா, தொடர்ந்து போலீசுக்கு டிமிக்கி கொடுத்து வருகிறார். முதலில் நித்தியானந்தாவுடன் இருப்பது நான் இல்லை என்று மறுத்த ரஞ்சிதா, அதன் பின்னர் நான் நித்தியானந்தாவின் பக்தை, வீடியோ விவகாரத்தில் நடந்த உண்மைகளை போலீசிடம் தெரிவிப்பேன் என்று கூறினார். இரண்டு மூன்று முறை போலீசில் வாக்குமூலம் அளிக்க தயாராக இருப்பதாகவும், கால அவகாசம் வேண்டும் என்றும் கடிதம் அனுப்பியிருப்பதாக தகவல்கள் வெளியாயின.

இந்நிலையில் நடிகை ரஞ்சிதா இந்த விவகாரத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சுயசரிதை புத்தகமாக எழுத திட்டமிட்டிருக்க்கிறார். அவதூறுகளை கடந்து வாழ்வது எப்படி? என்ற தலைப்பில் எழுதப்போகும் இந்த புத்தகத்தல் கடந்த 6 மாதகாலமாக தான் சந்தித்து வரும் பிரச்னைகள் பற்றி எழுதவிருக்கிறாராம். மேலும் உல்லாச வீடியோ ‌வெளியான விவகாரம் குறித்தும் விரிவாக எழுதப் போகிறாராம். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், "நான் எனது வாழ்வில் கடந்த 6 மாத காலமாக சந்தித்து வரும் அனுபவங்களை சுயசரிதை புத்தகமாக எழுதப்போகிறேன். எனது புத்தகம் வாழ்க்கையில் ஏற்படும் சொந்த பிரச்னைகளை தீர்க்க உதவும் வகையில் இருக்கும். இதுதொடர்பாக இரண்டு புத்தக பதிப்பாளர்களிடம் பேசியிருக்கிறேன். என் மீது சுமத்தப்பட்ட கட்டுக்கதை, பாரபட்சம் குறித்தும் எழுத உள்ளேன். நான் சக்திவாய்ந்த ஆன்மா பற்றி எழுதப் போகிறேன்" என்று கூறியுள்ளார்.

தலைமறைவு வாழ்க்கை பற்றிய கேள்விக்கு ஒரு நிமிடம் மவுனம் காத்த ரஞ்சிதா, நான் மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப் பட்டுள்ளேன். எனது உடல்நலம் சரியில்லை. இந்த விவகாரத்தால் நான் செயலற்ற நிலையில் இருக்கிறேன். பத்திரிகைகளில் என்னைப் பற்றிய ஏராளமான அவதூறு செய்திகள் வெளியாகியுள்ளன. நான் சொல்லாதவற்றையெல்லாம் நான் சொன்னதாக எழுதுகிறார்கள். விரைவில் சிபி-சிஐடி போலீசில் ஆஜராகி வீடியோ விவகாரம் பற்றி பேசுவேன்.

இந்த இக்கட்டான நிலையில் எனக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் கணவர், சகோதரிகள் மற்றும் பெற்றோர் இருந்தனர் என்று சொன்ன ரஞ்சிதா, சமீபத்தில் வெளியான ராவணன் படத்தில் நடித்திருந்தார். ஆனால் இதுவரை அவர் ராவணன் படம் பார்க்கவில்லையாம். சினிமாவில் இருந்து விலகியிருக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறியிருக்கிறார் ரஞ்சிதா.

வேறு ஏதாவது பட வாய்ப்புகள் வந்துள்ளதா? என்ற கேள்விக்கு, இப்போதைக்கு சினிமாவில் நடிப்பது பற்றி யோசிக்கவில்லை. எனக்கு ஒய்வு தேவைப்படுகிறது. சமூக சேவைகள் ‌செய்ய ஆர்வமாக இருக்கிறேன், என்று கூறியுள்ளார்.

தலைமறைவு வாழ்க்கை நடத்தி வரும் ரஞ்சிதா, மேற்கத்திய ஸ்டைலில் பாப் கட்டிங் போட்டு வலம் வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

Advertisement
கருத்துகள் (48) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (48)

raja - chennai,இந்தியா
12 மார், 2011 - 17:03 Report Abuse
 raja எந்த அனுபவம்?பெட்ரூமில் பெற்ற அனுபவமா ? அடி பாதகத்தி இந்த புத்தகத்த படிக்கறவன் லைப் ?
Rate this:
kumar - chennai,இந்தியா
22 டிச, 2010 - 00:39 Report Abuse
 kumar இதுலாம் ஒரு பொழப்பு
Rate this:
manimala - pinang,மலேஷியா
20 டிச, 2010 - 17:15 Report Abuse
 manimala avallai mannithu viduvathu thaan nallathu.athaividdu viddu eppadi ellam oruvarai avathuraga pesuvathu enna nyayam.valkaiyil tappe seiyamal eruke naam enna kadavulaa.konjam avaravar manathai thotdu solunggal parkalaam.
Rate this:
AT Samy - Cheenai,இந்தியா
06 ஆக, 2010 - 18:01 Report Abuse
 AT Samy Take it easy ok buy Ranjeetha
Rate this:
சபரி - tirupur,இந்தியா
03 ஜூலை, 2010 - 16:29 Report Abuse
 சபரி அடி சண்டாளா பாதகத்தி அத வேற எழுத போறாளாம்
Rate this:
மேலும் 43 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in