அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தனது வாழ்க்கையை சினிமாவாக எடுக்க பிரதமர் நரேந்திர மோடி சம்மதம் தெரிவித்துள்ளாராம். இந்த படத்தை, நடிகரும் தயாரிப்பாளருமான பரேஷ் ராவல் எடுக்க உள்ளாராம். இவர் பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரும் கூட. மோடியின் இளமைக்கால வாழ்க்கை பற்றி தான் எழுதி கட்டுரை தான், அதனை படமாக்க தூண்டி உள்ளதாக பரேஷ் தெரிவித்துள்ளார்.
மோடியின் இளமைக்கால கேரக்டரில் நடிப்பதற்கு முதலில் விவேக் ஓபராயை முடிவு செய்திருந்தாராம் பரேஷ். ஆனால் இந்த விஷயத்தில் இப்படத்தை பரேசுடன் இணைந்து இயக்க இருக்கும் குஜராத் எம்.ஆர்.ஐ.,யான மிடேஷ் படேல் மற்றும் காமசூத்ராவின் 3டி பதிப்பை இயக்கிய இயக்குனர் ரூபேஷ் பால் ஆகியோருடன் மாறுபட்ட கருத்து எழுந்ததால் அந்த முடிவை கைவிட்டாராம் பரேஷ்.
2012ம் ஆண்டு பிளேடைம் கிரியேஷன்ஸ் தயாரித்த ஓ மை காட் படத்தில் நடித்த போதே இந்த படத்திற்கான கதையை தயார் செய்து விட்டாராம். மோடி, குஜராத் முதல்வராக இருந்த போதே பரேசுக்கு அவருடன் பழகும் வாய்ப்பு கிடைத்ததாம். இதன் காரணமாக கடந்த ஆண்டே இந்த படத்தை எடுப்பதாகவும், அதில் மோடியை நடிக்க வைக்கவும் அவர் திட்டமிட்டிருந்தாராம். இது தொடர்பாக மோடியை அனுகிய போது அவர் மறுத்து விட்டாராம்.
தொடர்ந்த பரேஷ் பேசியதை அடுத்து மோடி, தனது வாழ்க்கையை படமாக்க சம்மதம் தெரிவித்தாராம். அதன் பிறகு மோடியுடன் பல அனுபவங்களை பகிர்ந்து கொண்ட பரேஷ், மோடியின் வாழ்க்கையை படமாக்க மிகுந்த ஆர்வத்துடன் பணியாற்ற துவங்கினாராம். இந்த படத்திற்கு மோடி சம்மதம் தெரிவித்ததை அடுத்து, இப்படத்தின் வேலைகள் விரைவில் துவங்கப்பட உள்ளதாம். அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் இந்த படம் திரைக்கு வர உள்ளதாம்.