தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சீனுராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்தில் ஹீரோவாக நடிப்பதற்கு முன்புவரை பல படங்களில் கெஸ்ட் ரோல் போன்று சின்னச்சின்ன வேடங்களில்தான் நடித்து வந்தார் விஜயசேதுபதி. ஆனால் அப்போதைய நிலை வேறு. ஆனால், பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஆகிய படங்களுக்கு பிறகு அவரது மார்க்கெட் எங்கோ போய்விட்டது.
ஆனபோதும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, சூதுகவ்வும், ரம்மி போன்ற படங்களில் மற்ற நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தானும் ஒரு வேடத்தில் நடித்திருந்தார். அதோடு, பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த விஜயசேதுபதி, திருடன் போலீஸ் படத்தில் ஒரு பாட்டுக்கு நடனமாடியுள்ளார். இப்படி மேலும் சில படங்களிலும் நட்புக்காக நடித்திருக்கிறார்.
ஆனால் இனிமேல் அப்படி நடிக்கப் போவதில்லையாம். தனக்கென ஒரு ஹீரோ அங்கீகாரம் வந்து விட்டதால் தொடர்ந்து கெஸ்ட் ரோலில் நடித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம். கதாநாயகனாக நடிக்கிற படத்தில் முழுக்கவனத்தையும் செலுத்தி நடிப்போம் என்ற முடிவுக்கு அவர் வந்திருக்கிறாராம். இது விஜயசேதுபதி மட்டுமே யோசித்து எடுத்த முடிவில்லையாம் அவரை வைத்து படம் இயக்கும் சில அபிமானத்திற்குரிய டைரக்டர்கள், சொன்ன அட்வைசும் ஒரு காரணமாம்.
அதனால் இப்போது யாராவது நட்பு அடிப்படையில் கெஸ்ட் ரோலில் நடிக்க வேண்டும் என்று விஜயசேதுபதி பக்கம் சென்றாலே, அவர் வேறு பக்கமாக திரும்பிக்கொள்கிறாராம். இருப்பினும் விஜயசேதுபதியை நோக்கி அன்புத்தொல்லைகள் அணிவகுத்து நிற்கின்றதாம்.