ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ப்ரீத்தி ஜிந்தா. இவர் இப்போது ஐபிஎல்., கிரிக்கெட் போட்டியில், பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக இருக்கிறார். ப்ரீத்தி ஜிந்தா தில்லான நடிகை, தப்பு என்று தெரிந்தால் அதை உடனே சுட்டிக்காட்டி விடுவார்.
சமீபத்தில் மும்பையில், இவர் ஹிருத்திக் ரோஷன் நடித்த பேங் பேங் படத்தை பார்க்க சென்றுள்ளார். அப்போது தியேட்டரில் தேசிய கீதம் பாடும்போது இளைஞர் ஒருவர் எழுந்து நிற்காமல் இருந்துள்ளார். இதனால் அந்த வாலிபரை திட்டி அந்த தியேட்டரை விட்டே வெறியேற்றிவிட்டார் ப்ரீத்தி ஜிந்தா. இதனை தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார் ப்ரீத்தி ஜிந்தா. ப்ரீத்தி ஜிந்தாவின் இந்த தில்லான செயலை பலரும் பாராட்டியுள்ளனர்.
அதேசமயம், ப்ரீத்தியின் இந்த செயலை பலரும் விமர்சனம் செய்தததுடன், இது தேவையில்லாத செயல் என்று கூற, தான் டுவீட் செய்ததை தன் டுவிட்டர் பக்கத்தில் இருந்து எடுத்துவிட்டார்.