ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஸ்வநாதன்-ராமமூர்த்தி, சங்கர்-கணேஷ் என பல இரட்டை இசையமைப்பாளர்கள் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்துள்ளனர். அந்த வரிசையில் சினிமாவில் நீண்டகாலம் நிலைக்க வேண்டும் என்ற உறுதியுடன் தற்போது சுபாஷ் -ஜவஹர் என்ற இரட்டை இசையமைப்பாளர்கள் தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆகியுள்ளனர். இவர்கள் இருவரும் அண்ணன்-தம்பியும்கூட.
பூவே பெண் பூவே, என்னமோ புடிச்சிருக்கு ஆகிய படங்களுக்கு ஏற்கனவே இசையமைத்துள்ள இவர்கள் தற்போது திரைக்கு வந்திருக்கும் தலக்கோணம் என்ற படத்திற்கும் இசையமைத்துள்ளனர். இதையடுத்து தெலுங்கில் பிரபல ஹீரோ ஒருவர் நடிக்கும் படத்திற்கும் இசையமைக்க கமிட்டாகியுள்ளார்களாம்.
இதுபற்றி சுபாஷ்-ஜவஹர் கூறுகையில், தமிழில் நாங்கள் இசையமைத்த முதல் இரண்டு படங்களும் ஹிட்டாக அமையவில்லை. ஆனால் தலக்கோணம் படம் இப்போது இரண்டாவது வாரம் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருப்பதால் எங்களது பாடல்களும் ரீச் ஆகியுள்ளது. அதோடு இந்த படத்தில் பின்னணி இசையமைப்பதற்கும் நல்ல ஸ்கோப் இருந்ததால் எங்களை இயக்குனர்கள் கவனிக்கத் தொடங்கியுள்ளனர்.
அதில் சில இயக்குனர்கள் அழைத்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் படங்களிலும கமிட்டாகி பேசப்படும் இசையமைப்பாளர்கள் பட்டியலில் நாங்களும் இடம் பிடிப்போம் எனறு சொல்லும் இந்த இரட்டையர். தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி இசையமைப்பாளர்களிடம் கீப்போர்டு பிளேயராக பல ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் பெற்றவர்களாம்.