இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
ஐ லவ் இண்டியா, மகாபிரபு ஆகிய படங்களை தயாரித்த ஜி.கே.ரெட்டியின் மகனான விஷால், இயக்குநராக வேண்டும் என்ற எண்ணத்தில் திரையுலகில் நுழைந்து நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குநராக சேர்ந்தார். வேதம் படத்தில் உதவி இயக்குநராக வேலை பார்த்த விஷால் செல்லமே படத்தில் நடிகராக அறிமுகமாகி கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து நடித்து வருகிறார்.
நடிகராக இருந்த விஷால் பின்னர் தயாரிப்பாளராகி, விஷால் ஃபிலிம் ஃபேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினார். பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், பூஜை, ஆம்பள ஆகிய படங்களைத் தயாரித்தவர் அடுத்த கட்டமாக, வி மியூசிக் என்ற ஆடியோ நிறுவனத்தையும் தொடங்கியிருக்கிறார். விஷாலின் இந்த முயற்சிகளைத் தொடர்ந்து, தற்போது தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்களுக்கு சினிமாவில் வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் புதிய அமைப்பு ஒன்றை ஆரம்பிக்க இருக்கிறாராம்.
இந்தத் திட்டத்தின் முதல்கட்டமாக, சிகாகோ என்ற இசை நிகழ்ச்சியை விஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கிறது. அவருடன் இணைந்து, வரலட்சுமி சரத்குமாரும் இந்த நிகழ்ச்சியை தயாரிக்கிறார். போடா போடி படத்தில் நடித்த சல்ஸா நடன இயக்குனரான ஜெஃப்ரி வார்டன் இந்த நிகழ்ச்சியை இயக்கவிருக்கிறார். இந்த நிகழ்ச்சிகென்றே பிரத்யேக இசையமைக்க உள்ளார் யுவன் ஷங்கர் ராஜா.
சிகாகோ என்ற இசை நிகழ்ச்சியை தயாரிப்பது குறித்து விஷாலிடம் கேட்டபோது, நடிப்பில் என்னை வளர்த்துக் கொள்வதற்கு மேடை நடிப்புப் பயற்சிகள் எனக்கு பெரிதும் உதவியிருக்கின்றன. இங்கே திறமையான பல தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்கள் உள்ளனர். சரியான வாய்ப்புக் கிடைத்தால் அவர்களால் பெரிய அளவில் சினிமாவிலும் ஜொலிக்க முடியும். எனவே அவர்களையும் திரையுலகத்தையும் இணைக்கும் வகையிலான அமைப்பு ஒன்றைஆரம்பிக்கும் முயற்சியில்இறங்கியிருக்கிறேன்! என்றார்.