ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
எம்.ஜி.ஆர்., நடித்த ''அமரகாவியம்'', ரஜினி நடித்த ''கர்ஜனை'' உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை மாயா. முன்னாள் கவர்ச்சி நடிகையான இவர் இன்று(அக்., 8ம் தேதி) மதியம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அவரை பெண் போலீஸ் ஒருவர் சோதனை செய்தார், அப்போது அவர் ஒரு பாட்டிலில் மண்ணெண்ணெய் வைத்திருப்பது தெரியவந்தது. அவரிடமிருந்து அதை பறிக்க அந்த பெண் போலீஸ் முயற்சித்தார், ஆனால் மாயா அதற்குள் தான் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை தன் மீது ஊற்ற முயற்சி செய்தார். போலீசார் அவரை தடுத்துவிட்டனர்.
சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி இப்படி ஒரு தற்கொலை முயற்சி செயலில் ஈடுபட்டிருக்கிறார் மாயா. மேலும் அம்மா வாழ்க என்று கூறியபடி ரோட்டில் படுத்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தார். அவரை போலீசார் உடனடியாக வந்து அப்புறப்படுத்தினர். மாயாவுடன் மற்றொரு பெண்ணும் உடன் இருந்தார், அவர் மாயாவின் மகள் என்று கூறப்படுகிறது.
கமிஷனர் அலுவலகத்தில், நடிகை மாயா தற்கொலைக்கு முயற்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.