நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… |
துப்பாக்கி படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் - விஜய் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் கத்தி. இசை வெளியீடு, டீசர் வெளியீடு என கடந்த சில வாரங்களாக இந்தப் படத்தைப் பற்றிய செய்தி பரபரப்பாகி உள்ளது. ஐ படம் தீபாவளிக்கு வர வாய்ப்பில்லை என்று தெரிந்தவுடன் பலரின் பார்வை தற்போது கத்தி படத்தின் மீது திரும்பியுள்ளது. துப்பாக்கி படத்தை விட பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்று முருகதாஸும், விஜய்யும் கடுமையாக உழைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். விஜய் படத்தில் இரு வேடங்களில் நடிப்பதால் அவருடைய ரசிகர்களும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். கத்தி படத்திற்குப் போட்டியாக வேறு எந்தப் படத்தையும் அவரது ரசிகர்கள் கருதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் டப்பிங் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. படத்தின் வியாபாரமும் எதிர்பார்த்ததை விட அதிகமான வரவேற்புடன் நடந்து வருகிறதாம். கேரளாவில் கத்தி படத்தைத் திரையிட பலத்த போட்டி ஏற்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள். கடந்த சில வருடங்களாகவே விஜய் நடிக்கும் தமிழ்ப் படங்களுக்கு கேரளாவில் அமோக வரவேற்பு இருந்து வருகிறது. அதனால்தான் ஜில்லா படத்தில் கூட மலையாள நடிகரான மோகன்லாலை நடிக்க வைத்தார்கள். தற்போது கத்தி படத்தை கேரளாவில் 200 திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். இதுவரை எந்த ஒரு தமிழ்ப் படமும் இவ்வளவு திரையரங்குகளில் வெளியானதில்லையாம். இது ஒரு புதிய சாதனையாகும். ஒரு தமிழ்ப் படம் இவ்வளவு திரையரங்குகளில் வெளியாவது மலையாளத் திரையுலகில் உள்ளவர்களுக்கும் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம். நல்லவேளை ஐ படம் தீபாவளிக்கு வரவில்லை. வந்திருந்தால் கேரளாவில் ஒரு மலையாளப் படத்தைக் கூட பார்த்திருக்க முடியுமா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள்.