தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி |
மலையாள நடிகர் மம்மூட்டி தனது மகன் துல்கர்சல்மானை ஹீரோவாக களமிறக்கி விட்டதையடுத்து, மோகன்லால் தனது மகனை கமல் நடித்து வரும் பாபநாசம் படத்தில் உதவி இயக்குனர் வேலைக்கு அனுப்பியிருக்கிறார். அவர்களையடுத்து இன்னொரு மலையாள நடிகரான ஜெயராமிற்கும் தனது மகன் காளிதாஸை ஹீரோவாக்கும் ஆசை ஏற்பட, தீவிரமாக கதை தேடிக்கொண்டிருந்தார்.
அப்போது விஜயசேதுபதி நடிப்பில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் சொன்ன ஒரு பக்க கதை -என்ற கதை பிடித்து விடவே அந்த படத்திலேயே தனது மகனை அறிமுகம் செய்ய முடிவு செய்தவர், பாபநாசம் படப்பிடிப்புக்காக தூத்துக்குடியில் முகாமிட்டிருந்த கமலை சென்னைக்கு வரவழைத்து அவரது திருக்கரங்களால் மகனை மீடியாக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
அதோடு, நில்லாமல், மகனுக்கு நடிப்பில் முழு பயிற்சி கொடுக்க வேண்டு என்பதற்காக, நடிப்பு ஆசிரியர் சோமசுந்தரம் என்பவரிடம் சில மாதங்களாக மகனை அனுப்பி முறையான பயிற்சியும் கொடுத்து மகனை கேமரா கண்களுக்கு முன்நிறுத்த ஆயத்தமாகி விட்டார். இந்த சோம சுந்தரம் மாஸ்டர் சினிமாவில் பல கலைஞர்களை உருவாக்கியவர். சித்தார்த் நடித்த ஜிகர்தண்டா படத்தில் வில்லன் பாபி சிம்ஹாவுக்கு நடிப்பு பயிற்சி கொடுக்கும் அதிரடி ஆசிரியராகவும் நடித்திருந்தார்.