இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள ஐ படத்தின் படப்பிடிப்புக்கள் முடிந்து, இறுதிக்கட்ட பணிகள் மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் இப்படத்தை ரிலீஸ் செய்ய ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.
இதனால் படத்திற்காக தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் வேலைகளை முடித்து விட்ட படத்தின் ஹீரோவான விக்ரம், இந்தியில் டப்பிங் பேசுவதற்காக மும்பையில் முகாமிட்டுள்ளார். இன்னும் இரண்டு நாட்களில் இந்தி டப்பிங் முடிந்து விடும் என்பதால் அந்த வேலைகளில் படுபிஸியாக இருக்கிறாராம் விக்ரம்.
ஐ படம் தீபாவளிக்கு ரிலீசாவது இன்னும் உறுதி செய்யப்படாததால் ஐ படத்தின் இந்தி டப்பிங் பேசும் வேலைகளுடன் விஜய் மில்டனின் பத்து எண்றதுக்குள்ள படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகளிலும் கலந்து கொண்டு வருகிறார் விக்ரம்.