சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி |
சீயான் விக்ரம் என்றாலே ஏதாவது வித்தியாசம் செய்யக்கூடியவர் என்பது எல்லோருக்குமே தெரிந்ததுதான். ஆனால் ஐ படத்தில் அவர் எடுத்திருக்கும் விஸ்வரூப நடிப்பைப்பார்த்து விட்டு கோடம்பாக்கத்திலுள்ள ஹீரோஸ் அனைவருமே மிரண்டு போயிருக்கிறார்கள். இப்படியும்கூட நடிக்க முடியுமா? என்று ஆளாலுக்கு பட்டிமன்றம் போட்டு பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆக, படமே இன்னும் திரைக்கு வராத நிலையில், அனைவரையும் பேச வைத்து விட்டார் விக்ரம்.
இந்த நிலையில், அஜீத்தைக்கொண்டு பெயரிடப்படாத படத்தை இயக்கி வரும் கெளதம்மேனனுக்கும் ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்ற ஆர்வம் தலைதூக்கியுள்ளது. ஏற்கனவே அஜீத்தை சால்ட் அண்ட் பெப்பர், யூத் என இரண்டுவிதமான கெட்டப்பில் நடிக்க வைத்து வருகிறார். இந்த நேரத்தில் படத்தின் க்ளைமாக்ஸில் அஜீத்தை டோட்டலாக மாற்றிக்காட்ட வேண்டும் என்று நினைத்தவர் அதையும் தற்போது செயல்படுத்தி வருகிறார்.
அதனால், படத்தில் கடைசி 15 நிமிடங்களில் வரும் அஜீத்தின் உடல்கட்டை மாற்றியமைக்க நினைத்த கெளதம்மேனன், மறுபடியும் அவரை ஜிம்னாஸ்டிக் பயிற்சிகளுக்கு அனுப்பியதோடு, தாடியும் வளர்க்க வைத்து தற்போது படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருக்கிறார். அதோடு கதைப்படி புலனாய்வு செய்யும் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அஜீத்தை மேலும் சில கெட்டப்புகளில் வித்தியாசப்படுத்தி நடிக்க வைப்பது பற்றியும் விவாதம் நடத்தி வருகிறாராம் கெளதம்மேனன்.