பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
சுப்ரீம் ஸ்டார் பிடிக்குமா? இல்லை புரட்சி திலகம் பிடிக்குமா? என்று சரத்குமாரைக்கேட்டால், புரட்சி திலகம்தான் எனக்கு பிடித்திருக்கிறது என்கிறார். நான் நிழல் என்ற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது அப்போது அப்படத்தில் அன்வர்அலி என்ற ஒரு இன்வென்ஸ்டிகேசன் ஆபீசராக நடித்துள்ள சரத்குமார் தனது கேரக்டர் பற்றி பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில், இந்த படத்தில் சோசியல் நெட்வொர்க் மூலமாக ஏற்படும் ஒரு விபரீதத்தை பற்றி கதை பண்ணப்பட்டிருக்கிறது. அது இன்றைய உலகிற்கு தேவையான ஒரு நல்ல மெசேஜ். இணையதளத்தில் பிள்ளைகள் என்ன பண்ணுகிறார்கள் என்பது பயமாகவே உள்ளது. இந்த படத்தைப்பொறுத்தவரை இணையதளத்தில் இரண்டு பேர் காதலிக்கத் தொடங்குகிறார்கள். இந்தியாவில் இருக்கும் அந்த காதலன் மலேசியாவில் இருக்கும் பெணணைத்தேடி செல்கிறான். அதையடுத்து அந்த பெண் இறந்து கிடக்கிறாள். அது எப்படி நடந்தது என்பதுதான் இந்த படத்தின் கதை.
நெட்வொர்க் காதல் எப்படி இருக்கிறது என்பதை மக்களுக்கு எடுத்து சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு நல்ல படமாக இது வந்திருக்கிறது. இந்த படத்தின் தாட் எனக்கு பிடித்திருந்ததால்தான் நடிக்க சம்மதித்தேன்.நான் நடித்திருப்பது கெஸ்ட் ரோல் அல்ல. அதை விட பெரிய ரோல். கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடம்.
காஞ்சனா படத்தில் நடித்தபோது இந்த வேடத்தை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்ளப் போகிறார்களோ என்று பயந்தேன். ஆனால் அந்த கருத்து சொல்லும் படத்தை மக்கள் ஏற்றார்கள். அதனால் இப்போது நான் நடித்துள்ள நீ நான் நிழல் படத்தையும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். அந்த அளவுக்கு இன்றைய பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய கதையாக இப்படம் வந்திருக்கிறது.
மேலும், இப்போது அரசியல் வேலைகளும் நிறைய இருப்பதால் இடையிடையே சில படங்களில் மட்டுமே நடிக்கிறேன். அதுவும் எனக்கு பிடித்திருந்தால் மட்டுமே நடிக்க ஒத்துக்கொள்கிறேன் என்று சொன்ன சரத்குமாரிடத்தில், சுப்ரீம் ஸ்டார், புரட்சி திலகம் என்று இரண்டு பட்டங்கள் வைத்திருக்கிறீர்க்ளே? இதில் உங்களுக்கு பிடித்தது எது? என்று கேள்வி கேட்கப்பட்டபோது, எனக்கு புரட்சியும் பிடிக்கும், திலகமும் பிடிக்கும் என்றார்.