'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சின்னத்திரை, பெரிய திரை இரண்டிலும் அறிந்த முகம் நீலிமா ராணி. சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து அதன் பிறகு சின்னத்திரை, பெரிய திரை என்று மாறி மாறி பயணித்துக் கொண்டிருப்பவர். இப்போதும் பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார், வாணி ராணி தொடரில் நடிக்கிறார். ஒரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.
நீலிமாவின் தந்தை விஸ்வமோகன் தமிழில் ராஜேஷ்குமார் மாதிரி தெலுங்கில் துப்பறியும் எழுத்தாளர் என்பது பலருக்குத் தெரியாது. 300க்கும் மேற்பட்ட கதைகளும், 100க்கும் மேற்பட்ட நாவல்களும் எழுதியிருக்கிறார். எழுத்தாளர் மகள் எழுத்தாளராகாமல் இருப்பாரா. நீலிமாவும் நிறைய கதைகள் எழுதிக் கொண்டிருக்கிறார். அதை தொகுத்து ஒரு புத்தகமாக போடவும் முடிவு செய்திருக்கிறார். நீலிமா எழுதுவது தெலுங்கு கதையல்ல தமிழ் கதைகள். இதுதவிர சில ஆங்கில இதழ்களில் தன்னம்பிக்கை கட்டுரைகளையும் எழுதி வருகிறார். ஒரு படத்துக்கு கதை எழுதி சீக்கிரமே இயக்குனராக அவதாரம் எடுத்தாலும் ஆச்சர்யம் இல்லை.