சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
பின்னணி பாடகர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் தாங்களே பல பாடல்களை பாடி விடுகிறார்கள் என்று இளம் இசையமைப்பாளர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது. அதை உண்மையாக்குவதுபோல் அனிருத், இமான், ஜீ.வி.பிரகாஷ்குமார் உட்பட பல இசையமைப்பாளர்கள் அதிக அளவில் தாங்களே பாடி வருகின்றனர். இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் சமீபத்தில் வெளிவந்துள்ள காவியத்தலைவன், ஐ படங்களில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடவில்லை. இவ்விரு படங்களிலும் ஏன் பாடவில்லை என்று ஏ.ஆர்.ரஹ்மானிடம் இயக்குநர் வசந்தபாலன் கேட்டிருக்கிறார். அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் என்ன பதில் சொன்னார் என்பதை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்...
இசையமைப்பாளர் ரகுமானிடம் பல விசயங்களை பேசிக்கொண்டிருந்தேன். காவியத்தலைவன், ஐ இரண்டு படங்களிலிலும் ரகுமான் அவர்கள் பாடாததைக் குறிப்பிட்டு நீங்கள் ஏன் இந்த இரண்டு படங்களிலிலும் பாடவில்லை என்று கேட்டேன். கண்டிப்பா பாடனுமுனு கட்டாயமா என்ன? ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்களே என்று சொன்னேன்.
என் இசையை ஒழுங்கா பண்ணா போதும் என்று காட்டமாக பதில் சொன்னார். நான் விடவில்லை, காவியத்தலைவனில் பாட இடம் இல்லை. ஐ திரைப்படத்தில் பாடியிருக்கலாமே என்று கேட்டேன்.
சிறிது மௌனம். பாடியிருக்கலாம்... என்னோடு நீ இருந்தால்.... பாடலை பாடியிருக்கலாம். ஆனால் பாடகர் சித் ஸ்ரீராம் என்னை விட நன்றாக பாடியுள்ளார். அவருக்கு கடல் திரைப்படத்தில் பாடியபோது அந்த அளவு கவனிப்பு கிடைக்கவில்லை. இந்த பாடல் ஹிட் ஆனால் அவருக்கு ஒரு வாழ்க்கை கிடைக்கும் அதனால் தான் நான் பாடவில்லை. அவருக்கு கிடைக்க வேண்டியதை நான் பிடிங்கிக்கொள்ளகூடாதுல்ல பாலன் என்றார்.
என்று தெரிவித்து இருக்கிறார் வசந்தபாலன்.