ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
வழக்கு எண் படத்தில் அறிமுகமானவர் ஸ்ரீ. அதன் பிறகு ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் நடித்தார். இரண்டு படங்களுமே நல்ல படங்கள் என்று பேசப்பட்டாலும் ஸ்ரீக்கு தனித்த அடையாளம் கிடைக்கவில்லை. அதேபோல தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கல்யாணின் மகன் ஹரிஸ். சிந்து சமவெளி உள்பட சில படங்களில் நடித்தார். கடைசியாக பொறியாளன் படத்தில் நடித்தார். அவரும் தனி அடையாளத்துக்காக போராடிக் கொண்டிருக்கிறார்.
இந்த இருவரையும் தனது அடுத்த படத்தில் இணைக்கிறார் சுசீந்திரன். ஜீவா படத்துக்கு பிறகு அவர் இயக்கும் படத்தில் ஸ்ரீயும், ஹரீசும் நடிக்க இருக்கிறார்கள். ஹீரோயினாக சம்ஸ்கிருதி செனாய் நடிக்கிறார்.
இரண்டு இளைஞர்களுக்கு இடையேயான ஈகோதான் கதை. தென் சென்னையில் நடக்கும் கதை. இதன் படப்பிடிப்பு இன்று (செப் 6) தொடங்குகிறது. ஒரு மாதம், ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்க திட்டமிட்டிருக்கிறார் சுசீந்திரன். ஸ்ரீயும், ஹரீசும் இந்தப் படத்தை மிகவும் எதிர்பார்க்கிறார்கள். அவர்களை சுசீந்திரன் கரை சேர்ப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.