ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
பூர்ணா சினிமாவுக்கு வந்து பத்து வருடங்களாகிவிட்டது. தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தில் அறிமுகமானார். விஜய்கூட அவரை சின்ன அசின் என்று வர்ணித்தார். ஆனாலும் பூர்ணாவுக்கு ஒரு ஹிட் படம்கூட தமிழில் அமையவில்லை. கந்தகோட்டை, துரோகி, வேலூர் மாவட்டம், வித்தகன், ஜன்னலோரம், தகராறு படங்களை ரொம்பவே எதிர்பார்த்தார் அவைகளும் கைகொடுக்கவில்லை. நடித்து முடித்த அர்ஜுனன் காதலியும் ரிலீசாகவில்லை. தமிழில் படம் பேசும் என்ற ஒரு படத்தை தவிர வேறு படங்களும் இல்லை.
இதனால் கொஞ்சம் கிளாமராக நடித்து தெலுங்கில் இரண்டாவது வரிசையில் இடம் பிடித்திருக்கிறார். பொம்மதே பொன்னம்மா, ஒக்கசாரி அவனு ஒக்காசரி காது, பொம்பாலி என மூன்று தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் மிலி படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
தமிழில் வாய்ப்பு குறைந்துள்ளது பற்றிக் கேட்டால் "நான் மொழிவாரியாக படங்களை பிரித்துப் பார்ப்பதில்லை எங்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கு நடிக்கிறேன். தற்போதும் கையில் 5 படங்கள் வரை வைத்திருக்கிறேன். ஓய்வில்லாமல் நடித்துக் கொண்டும் இருக்கிறேன்" என்கிறார் பூர்ணா.