விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
பாரத பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுடில்லியில் தூய்மை பாரதம் (க்ளீன் இண்டியா) திட்டத்தை துவக்கி வைத்தார். இந்த திட்டத்தில் இணைந்து பணியாற்றுமாறு கமலஹாசன், அமீர்கான், சல்மான்கான், பிரியங்கா சோப்ரா, டெண்டுல்கர், பாபா ராம்தேவ், சசிதரூர், அனில் அம்பானி, மிருதுளா சின்ஹா ஆகியோருக்கு அழைப்பு விடுத்தார்.
இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட கமலஹாசன் தூய்மை இந்தியா திட்டத்தில் 90 லட்சம் பேரை சேர்ப்பேன் என்று கூறினார். இந்த நிலையில் இந்த திட்டத்திற்கு நடிகர் சூர்யாவும் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நம்மையும், நமது இல்லத்தையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்வது முக்கியம். இது ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக இருக்க உதவும். நமது குழந்தைகளுக்கு செல்வத்தை அளிப்பது எவ்வளவு முக்கியமோ, தூய்மையான சுற்றுப்புறச்சூழலை அவர்களுக்கு அளிப்பது அதைவிட முக்கியம். ஆரோக்கியமான இந்தியாவுக்கு, சுத்தமான இந்தியாவை உருவாக்குவோம்.
பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை பாரத இயக்கத்தில் இணைந்து அதற்கு ஆதரவு தாருங்கள். ஜெய் பாரதம், தூய்மை பாரதம். இவ்வாறு சூர்யா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.