பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள சுமார் 150 தீவுக்கூட்டங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள நாடுதான் சீஷெல்ஸ். ஆப்பிரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள இந்த சீஷெல்ஸ், இயற்கை எழில் கொஞ்சும் நாடு என்பதால் உலகிலுள்ள அனைத்து நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு படையெடுத்து வருகின்றனர். சுற்றுலாவாசிகள் மூலம் இந்த நாட்டிற்கு பெரிய வருமானம் கிடைத்து வருகிறதாம்.
மேலும், இந்த நாட்டில் தமிழர்களும் பெருவாரியாக வசித்து வருகிறார்களாம். அதனால் இந்த ஆண்டு சீஷெல்ஸ் நாடு நடத்திய பண்பாடு கலாச்சார விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இசைஞானி இளையராஜாவை அழைத்திருந்தார்களாம். அந்நாட்டின் தலைநகரான விக்டோரியாவில் 4 நாட்கள் நடைபெற்ற விழாவில் இளையராஜா கலந்து கொண்டாராம்.
அப்போது, இளையராஜாவை சீஷெல்ஸ் நாட்டின் தூதராக அந்நாட்டு அரசு நியமிப்பதாக அறிவித்ததாம். அதற்கு இளையராஜாவும் சம்மதம் சொல்லி அந்த கெளரவத்தை ஏற்றுக்கொண்டாராம்.