'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மைனா விதார்த் வேகமாக வளர்ந்து வந்தவர். ஆனால், முதல் இடம், கொள்ளைக்காரன் என சில படங்களின் அதிர்ச்சி தோல்வி அவரை வேகமாக கீழே இறக்கியது. அதன்காரணமாக அவர் நாயகனாக நடித்து வந்த காட்டுமல்லி உள்ளிட்ட சில படங்கள் கிடப்பில் போடப்பட்டன. அதனால் ஹீரோ வாய்ப்பு இல்லாமல் ஜன்னல் ஓரம், வீரம் உள்பட சில படங்களில் கேரக்டர் ரோல்களிலும் நடித்தார்.
அதையடுத்து ஏற்கனவே அவர் நாயகனாக நடித்து கிடப்பில் கிடந்த பட்டையக்கிளப்பனும் பாண்டியா படம் வெளியாகியது. ஆனால் ஓடவில்லை. இந்த நேரத்தில் இந்தியில் வெளியான ஆமீர் படத்தின் தமிழ் ரீமேக்கான ஆள் படத்தில் நடித்தார். அப்படம் விதார்த்தை மீண்டும் நாயகனாக உயர்த்தியது. அதனால் இப்போது உலா, விழித்திரு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தனக்கு முன்ன பின்ன அறிமுகம் இல்லாதவர்கள் ஆடியோ விழாக்களுக்கு அழைத்தால்கூட மறுக்காமல் சென்று அவர்களை வாழ்த்துகிறார் விதார்த். நான் இந்த சினிமாவிற்கு முதலில் வரும்போது எனக்கு யாருமே தெரியாது. ரொம்ப கஷ்டப்பட்டுதான் சினிமாவில் வளர்ந்தேன். அதனால்தான் யாராவது புதியவர்கள் சினிமாவிற்கு வரும்போது என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன். அதோடு முகம் தெரியாதவர்கள் ஆடியோ விழாக்களுக்கு அழைத்தாலும அவசியம் வந்து அவர்களை வாழ்த்துகிறேன். இதனால் அவர்களுக்கும் சந்தோசம், வாழ்த்திய எனக்கும் புதிய கலைஞர்களை வாழ்த்திய திருப்தி கிடைக்கிறது என்கிறார் விதார்த்.