மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
மாஜி நடிகை ராதாவின் வாரிசுகள் கார்த்திகா-துளசி நாயர். இதில் அவரது முதல் வாரிசான கார்த்திகாவுடன் கே.வி.ஆனந்த் இயக்கிய கோ படத்தில் ஜோடி சேர்ந்த ஜீவா, இப்போது இளைய மகள் துளசி நாயருடன் ரவி கே.சந்திரனின் யான் படத்தில் டூயட் பாடியிருக்கிறார். ஆக, அக்காள்-தங்கை இருவருடனும் இணைந்து நடித்து விட்டார் ஜீவா.
அவரிடத்தில் கார்த்திகா- துளசி இருவரில் யார் சிறந்த நடிகை என்று கேட்டால், அக்காள்-தங்கை இருவரும் மீன் குஞ்சுகள்தான். அதனால் நடிப்பில் யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது. நானா நீயா என்றுதான் இருக்கிறார்கள். மேலும், கார்த்திகா கொஞ்சம் அமைதியானவர். ஓய்வு நேரத்தில்கூட அதிகம் கலகலக்க மாட்டார். தேவையானதைப்பற்றி மட்டுமே பேசுவார்.
ஆனால், துளசி நாயரோ, பேசத்தொடங்கி விட்டால் எப்எம் ரேடியோதான். நிறுத்தாமல் பேசிக்கொண்டேயிருப்பார். அதோடு, அவரது பேச்சில் காமெடி கலந்திருக்கும். எதையாவது சொல்லி ஜாலியாக அரட்டையடித்துக்கொண்டே இருப்பார். அதனால் சோகமான காட்சிகளில் நடிக்கும்போதுகூட அவரது கிச்சு கிச்சு பேச்சினால் சிரிப்பை அடக்க முடியாமல் அவதிப்பட்டிருக்கிறேன்.
அதோடு, கார்த்திகா என்னை சார் என்றே அழைத்தார். ஆனால் துளசியோ முதல் நாள் என்னை சந்தித்தபோதே அங்கிள் என்றார். அதைக்கேட்டு அதிர்ந்து விட்டேன். தயவு செய்து என்னை ஜீவா என்றுகூட கூப்பிடு, ஆனால் அங்கிள் என்று மட்டும் கூப்பிடாதே என்று சொன்னேன். காரணம், உடன் நடிக்கும் நடிகை அங்கிள் என்கிறபோது நமக்கு என்னவோ ரொம்ப வயதாகி விட்ட பீலிங்ஸ் வருகிறது என்கிறார் ஜீவா.