தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இதுவரை நாய் உள்ளிட்ட வாயில்லா ஜீவன்களை துன்புறுத்தாதீர்கள் என்று குரல் கொடுத்து வந்த த்ரிஷா, தற்போது குடித்து விட்டு வாகனங்களை ஓட்டாதீர்கள் என்றும் குரல் கொடுத்து வருகிறார்.
இதுபற்றி அவர் விடுத்துள்ள செய்தியில், குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டுவதால் சாலைகளில் விபத்து ஏற்படுவதோடு, நடந்து செல்லும் அப்பாவி மக்களும் விபத்துக்கு ஆளாகிறார்கள். என்னைப் பொறுத்தவரை குடித்து விட்டு எனது டிரைவரே வாகனம் ஓட்டினாலும் அவரை நான் போலீசில் ஒப்படைப்பேன்.
மேலும், நான் குடிப்பவர்களுக்கு எதிரி அல்ல. குடிக்க வேண்டும் என்றால், வீட்டிற்கு சென்று குடித்து விட்டு தூங்கிவிடலாம். அதை விடுத்து பணியில் இருக்கும்போது குடிப்பதால்தான் விபத்துக்கள் நேரிடுகிறது என்று கூறியுள்ள த்ரிஷா, ஐதராபாத்தில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவோர் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதேபோல் தமிழ்நாட்டிலும் கடுமையான நடவடிக்கை எடுத்தால் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களால் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.