ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிப்பை விட எனக்கு படிப்புதான் முக்கியம் என்று பூ பட நாயகி பார்வதி கூறியுள்ளார். டைரக்டர் சசி இயக்கத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட படம் பூ. படத்தின் நாயகனாக ஸ்ரீகாந்த் நடிக்க நாயகியாக பார்வதி என்ற புதுமுக நடிகை நடித்தார். சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் வேலை பார்க்கும் பெண்ணாகவே வாழ்ந்து காட்டிய பார்வதி, கவர்ச்சிக்கு மறுத்ததால் தமிழில் அடுத்தடுத்து பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும், கன்னடம் மற்றும் மலையாள திரையுலகம் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்க காத்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் பார்வதியோ, எனக்கு நடிப்பை விட படிப்புதான் முக்கியம் என்று படிப்பில் மூழ்கி விட்டார். தற்போது எம்.ஏ. இறுதியாண்டு படித்து வரும் பார்வதி இதுபற்றி கூறுகையில், எனக்கு தேர்வு நெருங்கி வருவதால் படிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறேன். எப்போது வேண்டுமானாலும் நடிக்கலாம். ஆனால் படிப்பை அதற்குரிய காலகட்டத்தில் முடித்துவிட வேண்டும். எவ்வளவு பணம் இருந்தாலும் திருமணம் என்று வரும்போது பெண் என்ன படித்திருக்கிறாள் என்பதைத்தான் பார்க்கிறார்கள். தமிழில் பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லையென்றாலும் மலையாளத்திலும் கன்னடத்திலும் நடிக்க அதிக வாய்ப்புகள் வருகின்றன. சம்பந்தப்பட்ட இயக்குநர்களிடம் என் தேர்வு முடிந்தவுடன் நடிக்க வருகிறேன் என உறுதியளித்திருக்கிறேன்'' என்றார். நல்ல பாலிஸி!!